சிவகளிப்பேரலை- 94

முன்பு 7-ம் ஸ்லோகத்தில், சிந்தையெல்லாம் சிவமயமாகிவிட வேண்டும் என்பதை எடுத்துரைத்த பகவத்பாதர், இந்த ஸ்லோகத்தில் அதனையை மீண்டும் வலியுறுத்துகிறார். அனைத்துமாகி நிற்கும் பரம்பொருளான அந்தப் பரமசிவத்தைப் பற்றினால், பற்றுகள் தீர்ந்துபோய் வாழ்க்கைப் பயன் பூர்த்தியாகிவிடும் என்கிறார்.

விடுதலைப் போரில் அரவிந்தர் – 2

அரவிந்தர் 1879 முதல் 1893 வரை பதினான்கு ஆண்டுகள் இங்கிலாந்தில் இருந்தார். முதல் ஐந்தாண்டுகள் மான்செஸ்டரில், அடுத்த ஆறு ஆண்டுகள் லண்டனில், கடைசி மூன்றாண்டுகள் கேம்பிரிட்ஜில் இருந்தார். எப்போதாவது வீட்டில் இருந்து வரும் கடிதம், நாளிதழ்களில் வரும் செய்தி, கேம்பிரிட்ஜில் இருந்தபோது ஏற்பட்ட சில அறிமுகங்கள், என்பதைத் தவிர தாயகத்தோடு அவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. பாரதம் பற்றி, அதன் மக்கள் பற்றி, அதன் பண்பாடு பற்றி, சமயம் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் வளர்ந்தார். ”அந்த விஷயத்தில் முற்றிலும் அறியாமையில்தான் இருந்தேன்” என்று அவர் பின்னாளில் குறிப்பிட்டுள்ளார்....