ஒரு காதல் பாட்டிலும் கூட உயர் வாழ்க்கைத் தத்துவத்தை புகுத்த முடியும், கவியரசரால். சம்சாரம் என்னும் வாழ்க்கையில் சந்தோஷமே இனிய ராகம்- சலனங்கள் இல்லாத வரை. அற்புதமான பாடல் வரிகள்.
Author: vamumurali
சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும்
சென்னையில் பழைய கட்சியாருக்கு (கோகலே கோஷ்டி- நிதானக் கட்சியார்) ஆதரவு குறைந்து புதிய கட்சியாருக்கு (திலகர் கோஷ்டி- தீவிரவாதிகள்) ஆதரவு பெருகியதை பெருமகிழ்ச்சியுடன் செய்தியாகத் தீட்டுகிறார் இதழாளர் பாரதி. ஸர் பட்டம் இனி மரியாதைக்குரியதல்ல என்றும் பகடி செய்கிறார். “ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்” என்று எழுதும்போது, பாரதியின் அரசியல் நுண்ணுணர்வும், தீவிரக் கொள்கைப் பிடிமானமும் வெளிப்படுகின்றன...
இது மிஷின் யுகம்
கூலிக்கு வேலை செய்யும் உழைப்பாளிகளின் இயந்திரத்தனமான வாழ்க்கையை சில நிமிட நிகழ்வுகளில் ஒரு சிறுகதையாக இங்கே பதிவு செய்கிறார் புதுமைப்பித்தன். ஓர் உணவகத்தில் நிகழும் சம்பாஷனைகள், காட்சிகளை செதுக்கிவைத்த வரிகளில் படிமம் ஆக்கி இருக்கிறார். பெரிய உபதேசம் இல்லை... படித்து முடிக்கும்போது அந்த ‘சர்வர்’ நமது மனதில் பதிந்து விடுகிறான்....
மகாவித்துவான் சரித்திரம்- 1(16)
புதுச்சேரியில் இயன்றவரையில் தமிழ்ப்பாடங்களைக் கற்றுப் பாடப் படிக்கப் பிரசங்கிக்க ஒருவாறு பயிற்சியுற்றிருந்த செ.சவராயலு நாயகரென்னும் கிறிஸ்தவர் இவர் படிப்பிக்கும் நலத்தைக் கேள்வியுற்று திரிசிரபுரம் வந்து தியாகராச செட்டியார் முதலியோர் முகமாகக் கையுறைகளுடன் இவரைக் கண்டு, வீரமாமுனிவ ரென்னும் புனைப்பெயர் கொண்ட டாக்டர் பெஸ்கியாற் செய்யப் பெற்ற தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியனவாய தங்கள் சமய நூல்களைப் பாடஞ்சொல்ல வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த இவர் அவரைப் பரீட்சித்து அவருடைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிந்து சில கருவி நூல்களை முதலிற் பாடஞ் சொல்லிவிட்டுப் பின்பு அவர் விரும்பிய வண்ணம் தேம்பாவணி முதலியவற்றிற்குப் பொருள் கூறித் தமிழில் நல்ல பயிற்சியை உண்டாக்கி அனுப்பினர். அதன் பின்பு சவராயலு நாயகருக்குக் கிறிஸ்தவர் குழாங்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம்.
விடுதலைப் போரில் அரவிந்தர்-7
"தேசத்தின் முன்பு விதி ஒரு பணியை, ஒரு லட்சியத்தை முன்வைக்கும் போது, அந்த ஒரு பணியின், லட்சியத்தின் முன்பு மற்ற எல்லாவற்றையும், அவை எவ்வளவு தான் உயர்ந்ததாக மேன்மையானதாக இருந்தாலும் அவை அனைத்தும் தியாகம் செய்யப்பட வேண்டும். இப்பொழுது நம் தாய்நாட்டிற்கு அதுபோன்றதொரு தருணம் வந்துள்ளது. நாம் அவளுக்குப் பணி செய்ய வேண்டும். நமது எல்லாச் செயல்களும் தேச சேவையை நோக்கியதாகவே இருக்க வேண்டும். நீங்கள் கற்பதாக இருந்தால் அவளுக்காகவே கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் உடல், மனம், ஆன்மாவை அவளது சேவைக்காகத் தயார்படுத்துங்கள். அவளுக்காக வாழ்வது மட்டுமே உங்கள் ஊதியமாகட்டும். நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றால் அவளுக்கு சேவை செய்யவே அறிவைத் திரட்டி வாருங்கள். அவள் வளம் பெற பணிபுரியுங்கள். அவள் மகிழ்ச்சி அடைவதற்காக நீங்கள் கஷ்டப்படுங்கள். இந்த ஒரு அறிவுரையிலேயே எல்லாம் அடங்கி உள்ளது"...
பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை
உலகின் பிற நாடுகள் எவ்வாறு அரசியலில் மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை போகிற போக்கில் செய்தியாகச் சொல்லி, இந்தியர்களின் மனதில் தேச விடுதலை எண்ணத்தை வளர்க்க, இதழாளர் பாரதி பாடுபட்டதை இச்செய்தி காட்டுகிறது. பாரசீக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்ததை எவ்வளவு குதூகலமாக பாரதி கொண்டாடுகிறார், பாருங்கள்!
சத்திய சோதனை- 4(6-10)
மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நற்செயலைப் பாராட்ட வேண்டும்; தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். ‘பாவத்தை வெறுப்பாயாக. ஆனால், பாவம் செய்பவரை வெறுக்காதே’ என்பது உபதேசம். இது புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.....
எனது முற்றத்தில்- 19
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் நூற்றாண்டு 2006இல் வந்தது. அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகள், கட்டுரைகள், பேட்டிகளின் பதிவுகள் 'ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் 12 தொகுதிகளாக வெளியாகின. தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து நிறைய பெரியோர்கள் வந்து இதற்காகவே சென்னையில் தங்கி பதிப்புப் பணியை நிறைவேற்றிக் கொடுத்தார்கள் என்பதால் என் மனதில் மலைப்பே தோன்றவில்லை. தொகுதிகளின் பல்வேறு கட்டுரைகளின் நடையை செப்பம் செய்து கொடுத்த இருவர் தற்போது இரண்டு மாநிலங்களின் ஆளுநர்கள் என்பது சுவாரஸ்யமான தகவல். ....
இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ரொட்டித் துண்டம்
அரசியலில் திலகரின் தீவிரவாத கோஷ்டியைச் சார்ந்திருந்த மகாகவி பாரதிக்கு, கோகலே தலைமையிலான நிதானக் கட்சியாரின் மன்றாடல்களும், ஆங்கிலேயரை உயர்த்திப் பேசும் தன்மையும் கசந்ததில் வியப்பில்லை. அதனை தனது ‘இந்தியா’ பத்திரிகையில் அவ்வப்போது கடுமையாகத் தாக்கி வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. தனக்கு இதழியலில் முகவரி கொடுத்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையே ஆயினும், நிதானக்கட்சியாரின் கருத்தை ஆதரித்தால், பாரதியின் கண்டனத்துக்கு ஆட்பட்டே ஆக வேண்டும். இந்த செய்தியில் இதழாளர் பாரதியின் தார்மிக நெறியும், தனது நெஞ்சுக்கு நீதி என்று பட்டதைச் சொல்லும் இதழியல் துணிவும் இருப்பதைக் காண்கிறோம்.
பாரதி-அறுபத்தாறு- (57-66)
“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா” என்று துவங்கும் பாரதி- அறுபத்தாறு சுயசரிதைக் கவிதையில், புதுவையில் தனக்கு வழிகாட்டிய ஆன்மிகப் பெருமக்களைப் பதிவு செய்திருக்கிறார் மகாகவி பாரதி. குரு கோவிந்தசாமியின் புகழை ஏற்கனவே மூன்று பாடல்களில் (37-39) பாடிய அவர், கோவிந்தசாமியுடன் உரையாடல் என்ற தலைப்பில் கூறி இருக்கும் பாடல்கள் (57-66) அடங்கிய இக்கவிதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை விரும்புவோர்க்கு லட்சியக் கவிதையாகும். “பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!” என்ற வரியில் அவரது சிந்தனை தெள்ளென வெளிப்படுகிறது. அதேசமயம், “சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்” என்ற நிறைவு வரிகளில் பாரத ஆன்மிக ஞானத்தின் செறிவை பாரதியிடம் காண்கிறோம்....
தென்றலுடன் பிறந்த பாஷை
நமது தாய்மொழியாம் தமிழின் மகிமை அறியாமல் இதைத் தூற்றும் கூட்டம் இன்றும் உண்டு; அன்றும் இருந்தது. அப்போது, அத்தகையோரை எள்ளி நகையாடி, தமிழ் மீது பற்றுக் கொண்ட ஜி.யு.போப்பை உதாரணமாகக் காட்டி, மகாகவி பாரதி தந்த செய்தி இது. கூடவே, சுதேசமித்திரன் இதழில் வெளியான செய்தியின் நறுக்கையும் இணைத்துள்ள அவரது பாங்கு மெச்சத் தக்கது...
மகாவித்துவான் சரித்திரம்-1(15)
கல்விப் பெருமை மிக்குடைய இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பணிவுடன் பாடங்கேட்டதை நினைக்கும்பொழுது, துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், சிறந்த கல்விமானென்று பெயர் பெற்ற பின்பு, திருநெல்வேலியிற் சிந்துபூந்துறையிலிருந்த தருமை வெள்ளியம்பலத் தம்பிரானவர்கள்பால் தொல்காப்பியம் பாடங்கேட்ட செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது.....
லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்
வங்கப் பிரிவினையால் இந்திய மக்களின் ஒட்டுமொத்த விரோதத்தை சம்பாதித்தவர் கர்சன் பிரபு. அவர் கொல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘இந்தியர்கள் உண்மைக்கு மாறானவர்கள்’ என்ற பொருளில் பேசியதை மகாகவி பாரதி இச்செய்தியில் கண்டிக்கிறார். தனது செய்திக்கு ஆதாரமாக, ஆங்கிலேயர் ஒருவரே கர்சனின் மோசடித்தனத்தைக் கண்டித்ததையும் எடுத்தாண்டிருக்கிறார். ஓர் இதழாளரின் கடமை என்பது நாட்டு மக்களுக்கு உண்மையை உரைப்பதும் தெளிவான சான்றுகளை முன்வைப்பதும் தான் என்பதை இதழாளர் பாரதி இதன்மூலம் செய்து காட்டி இருக்கிறார்...
பாரதி- அறுபத்தாறு- (54-56)
காதலின் புகழை சென்ற கவிதையில் பாடிய மகாகவி பாரதி, இக்கவிதையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெண்மைநலம் உண்ணும் காமுகர்களின் தீய நெஞ்சை சுட்டிக்காட்டி, பொய்மைக்காதலைச் சாடுகிறார். ”ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால், அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?” என்ற அவரது கேள்வி, “கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்ற முந்தைய ஒரு கவிதையின் (பெண்கள் விடுதலைக் கும்மி) நீட்சியே.
பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான வில்லியம் ஜென்னிங் ப்ரெயன் (1860- 1925), சிறந்த நாடாளுமன்றவாதியும் வழக்கறிஞரும் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்று முறை (1896, 1900, 1908) போட்டியிட்டு தோல்வியுற்றவர். எனினும் அந்நாட்டின் அரசியலில் ஒரு நிலையான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். அதிபர் வுட்ரோ வில்சனின் அரசில் அமைச்சரவை செயலராக (1913) பணிபுரிந்தவர். இவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி எழுதிய கட்டுரை குறித்து இதழாளர் பாரதி இங்கு சிலாகிக்கிறார்...