கூட்டணிகளுக்குள் குத்துவெட்டு!

தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால், நியாயமான வாக்குறுதிகள் அளித்தால் போதாது என்ற நிலையை உருவாக்கிவிட்ட தமிழக மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகள். இதுதவிர, தேர்தல்காலத்தில் வீடு தேடி வரும் பரிசுப் பொருட்களும் பண முடிப்புகளும் தான் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. இதுகுறித்து ஜனநாயக மதிப்பீடுகளைக் காக்க விரும்புவோர் கவலைப்பட்டே ஆக வேண்டும்.