கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…

உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள்  கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.