சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று தெரிவதில்லை. பூர்வஜன்ம நினைவாக இருக்கலாம். அப்படி என்னை முதல் முறை சந்திப்பிலேயே ஆகர்ஷித்தவர் நம்பி அண்ணா. தற்போது ‘விஜயபாரதம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரை ஒரு சஹ்ருதயராக வாழ்த்தி மகிழ்கிறேன். எனது இதழியல் பணியில் சில திசைகாட்டிகள் உண்டு. அவர்களுள் முதன்மையானவர் நம்பிஜி.
Tag: இதழியல்
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…
உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள் கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.
மாலை-2
கூடிய வரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கக்ஷி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது.
தமிழ்நாட்டின் விழிப்பு
ஒரு தேசத்தின் பொதுப்புத்தியை அளந்து பார்க்க வேண்டுமானால், அதற்கு எத்தனையோ அறிகுறிகள் உண்டு. அந்த தேசத்து ராஜாங்க நிலை, தர்ம ஸ்தாபனங்களின் நிலை, கோயில்களின் நிலை முதலிய எத்தனையோ அடையாளங்களால் ஒரு தேசத்தாரின் பொது ஞானத்தை அளவிடலாம். இவற்றுள்ளே சமாசாரப் பத்திரிகைகளையும் ஓரடையாளமாகக் கருதத்தகும்.