-கவியரசு கண்ணதாசன்
சினிமா மூலமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்று தமிழக அரசியல் களத்தையே மாற்றியவர் திரு. எம்.ஜி.ஆர். அதற்கு அவரது திரைப்படங்களில் அமைந்த பாடல்களும் பெருமளவில் உதவியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாடல் இது. கவியரசரின் சிந்தனை வரிகள் ஒரு கதாநாயகனின் சொற்களாக அமைந்தபோது, அவர் மக்களின் தலைவன் ஆனது வியப்பில்லை தான்….

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா!
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா!
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா? மீசை முறுக்கு!
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி,
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி,
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்,
இந்த பூமி சிரிக்கும்! அந்தச் சாமி சிரிக்கும்!
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா!
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா!
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு!
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு!
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து!
அதில் நீதி உன்னைத் தேடி வரும் மாலை தொடுத்து!
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .
திரைப்படம்: என் அண்ணன் (1970) இசை: கே.வி.மகாதேவன் பாடியவர்: டிஎம்.செளந்தரராஜன் நடிப்பு: எம்.ஜி.ராமசந்திரன்
.
பாடலின் திரைப் பதிவு…
$$$