அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, சட்டமேதை, சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பரிணாமங்கள் இருந்தபோதும், அடிப்படையில் அவர் ஒரு பொருளாதார நிபுணர்....வறுமையை ஒழிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப் பொருளாதாரத்தின் முக்கியமான நோக்கங்களாகக் கருதினார். அவரது சிந்தனைகள் சாமானிய மக்களின் சிரமங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது பற்றியதாகவுமே இருந்தது... (நமது தளத்தில் அம்பேத்கரை அறிமுகம் செய்யும் முதல் கட்டுரை இது- பேரா.ப.கனகசபாபதி எழுதியது)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-14

-கி.வா.ஜகந்நாதன் 14. போர் மூளுதல் தகடூர்க் கோட்டைக்குள்ளே இதுகாறும் இருந்த அமைதி இப்போது குலைந்தது. உண்மையான ஆபத்து இப்போதுதான் வந்து நிற்கிற தென்று அதிகமான் உணர்ந்தான். சுருங்கை வழியைப் பகைவர்கள் அடைத்தது தெரிந்து, அவர்களுக்கு அவ்வழி எப்படித் தெரிந்தது என்று ஆய்ந்தான். அதைப்பற்றி இப்போது ஆராய்ந்து பயன் இல்லையென்று விட்டுவிட்டான். இனிமேல் தான் மெய்யான போருக்கு ஆயத்தம் செய்ய வேண்டும். இனியும் கோட்டைக்குள் நெடுநாள் தங்க முடியாது. பட்டினி கிடந்து வாடிக் கதவைத் திறப்பதற்கு முன்னாலே, உடம்பில் … Continue reading அதிகமான் நெடுமான் அஞ்சி-14

கண்ணன் பாட்டு- 3

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ பாடல்களில் மூன்றாவது கவிதை... கண்ணன் - என் தந்தை.

காற்றிடைச் சாளரம்- 4

கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதியுள்ள சிறு கவிதை- பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ போல.

வலிமைக்கு மார்க்கம்- 2

...குழந்தையானது குமரன் அல்லது குமரியாவதற்கு அழுகின்றது; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெருமூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகின்றான்; வலிய மனிதன் தன்பால் வறுமை வந்துவிடுமோ என்ற அச்சத்தால் வருந்துகிறான் அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத்தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ்திரத்தைக் கற்பதாலோ ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற் கொள்கையை அனுசரிப்பதாலோ, தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால் விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதியற்றதாக்கி விடுகின்றது; அத்தத்துவ சாஸ்திரத்தைப் பயனற்றதாக்கி விடுகின்றது; பல வருஷங்களாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது.... (வ.உ.சி.யின் ’வலிமைக்கு மார்க்கம்’ நூலின் 6, 7 அத்தியாயங்கள்)...