-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

அங்கே அப்படி…
காற்றின் மேடையில்
பற்றிடத்திலிருந்து விடுபெற
நெருப்பு போராடுகிறது.
.
சினந்து சீறுகிறது
கொதித்தெழுகிறது.
நெருப்புத் தூசுகளை
வாரியிறைக்கிறது.
.
ஜ்வாலை விரும்பினாலும்
ஸ்தூலம் விடுவதாயில்லை.
.
இங்கே இப்படி…
ஐயத்துடன் எரிகிறேன்.
நான்…
ஜ்வாலையா?
ஸ்தூலமா?
.
$$$