வந்தேமாதரம்

மகாகவி பாரதி, ‘வந்தேமாதரம்’ கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு எழுதிய முன்னுரை இது...

எனது முற்றத்தில்… 2

எல்லா மரம் செடி கொடிகளையும் எல்லோருக்கும் அடையாளம் காண முடிகிறதா என்ன?  ராமாயணத்தில் அனுமனுக்கும்தான் தெரியவில்லை. அதனால்தானே சஞ்சீவி பர்வதத்தையே தூக்கிக்கொண்டு போனார்? ஊர்ப்புறங்களில் தடுக்கி விழுந்தால் எருக்கஞ்செடி,  தும்பை,  குப்பைமேனி தலைகாட்டும். எல்லாம்  மருந்துக்கு ஆகும்.  மருந்துக்கு ஆகாதது என்று ஏதாவது உண்டா என்ன?  இல்லை என்கிறது "நாஸ்தி மூலம்  அனவ்ஷதம்" (ஔடதத்துக்கு ஆகாத  வேர் இல்லை) என்ற பழைய சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று. தகுதி இல்லாதவர் என்று யாரும் கிடையாது என்ற கருத்தை வலியுறுத்த வந்த ஸ்லோகம் அது....

சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்

மகாகவி பாரதியின் சக்தி மீதான இப்பாடல், அவரது ஆத்ம சமர்ப்பணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த உடலும் உயிரும் வாழ்வும் சக்தியின் லீலை என்ற கவிஞரின் சிந்தனை சொற்பெருக்கில் தெறிக்கிறது...

சாந்திக்கு மார்க்கம் – 4

எளியவரை இகழ்தலை வலியவர் நிறுத்தட்டும்! வலியவரை நிந்தித்தலை எளியவர் நிறுத்தட்டும்! பேராசைக்காரர் எப்படி ஈவது என்றும், காமிகள் எப்படித் தூயர் ஆகலாம் என்றும் அறியட்டும்! கட்சிக்காரர் சண்டையிடுவரை நிறுத்தட்டும்; கருணையில்லாதவர் மன்னிக்கத் தொடங்கட்டும்! பொறாமைக்காரர் மற்றவரோடு சேர்ந்து சந்தோஷிக்க முயற்சிக்கட்டும்! பிறரை நிந்திப்போர் தமது நடத்தையைப் பின்பற்றி நாணம் அடையட்டும்! ஆடவர்களும் மகளிர்களும் இந்த வழியைப் பற்றட்டும்! நல்ல காலம் இதோ வந்துவிட்டது. ஆதலால், எவன் தனது அகத்தைச் சுத்தப்படுத்துகிறானோ, அவனே உலக உபகாரி.

சக்தி மீதான பாடல்கள்-1

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் பராசக்தி மீதானவை மிகுதி. அவற்றில் 18 முதல் 23 வரையிலான பாடல்கள் இங்கே...

போரும் அமைதியும் அரவிந்தரும் 

பூமி என்ற கோளின் பரிணாம வரலாற்றுப் பின்புலத்தில் மனித வரலாற்றைக் கண்ட தீர்க்கதரிசி ஸ்ரீ அரவிந்தர். சமூகப் பரிணாமம் பற்றிப் பேசும் டார்வின் அல்லது மார்க்ஸின் கொள்கைகளின் அடிப்படையில் பரிணாம தத்துவத்தை முன்வைத்த பல தத்துவவாதிகள் மேற்கத்திய நாடுகளில் தோன்றியுள்ளனர். என்றபோதிலும் (விழிப்பு) உணர்வு என்ற ரீதியில் பரிணாம வளர்ச்சியை அணுகியவர்  ஸ்ரீ அரவிந்தர்.... ஸ்ரீ அரவிந்தர் போருக்கான உளவியல் காரணங்களைப் பற்றி எழுதி உள்ளவை இப்போது நடக்கும் ரஷ்ய - உக்ரைன் யுத்தம் பற்றி நமக்கு சரியான புரிதலை அளிக்குமா? 

மஹா சக்தி வெண்பா

மகாகவி பாரதி, வெண்பா வடிவில் மஹா சக்தியைப் பாடிய பாடல் இது... அவரதி பக்திப் பாடல்களில் 17வது கவிதை இது...

குளத்தங்கரை அரசமரம்

சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழின் முன்னோடி இதழாளருமான வ.வே.சு.ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை  அரசமரம்’  சிறுகதை, தமிழின் முதல் சிறுகதை (1915) என்று கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு முன்னமே மகாகவி பாரதி தமிழில் சிறுகதை எழுதி இருக்கிறார். அதேபோல, இக்கதை ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய  ‘கடேர் கதா’ என்ற சிறுகதையின் தழுவல் என்று கூறுவோரும் உள்ளனர். குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்வதாக அமைகிறது இச்சிறுகதை. “பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம்” என்ற  நீதி போதனையுடன் இக்கதை முடிகிறது.  அக்கால சுதந்திரப் போராளிகளின் சமூக சீர்திருத்த எண்ணங்களை வெளிப்படுத்துவதாக இக்கதை இருப்பதைக் கவனிக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக் கால இந்தியாவில், தமிழ்நாட்டின் ஒரு ஊரின் பிரதான குளத்தின் கரையில் வெகுகாலமாக இருந்துவரும் அரசமரம் நமக்குச் சொல்கிறது இந்தக் கதையை. குறிப்பாக நாயகி ருக்மிணியின் கதையை உருக, உருகச் சொல்கிறது. படித்து முடிக்கும்போது மனபாரம் தாங்காமல் ஆழ்ந்த பெருமூச்சு நம்மிடமிருந்து வெளிப்படுகிறது. இத்துணை விசாலமான  பார்வை கொண்ட வ.வே.சு. ஐயரையா நமது தமிழகத்தில் பிராமணர் என்ற ஒரே காரணத்துக்காக கரித்துக் கொட்டினர் என்பதை நினைத்தாலே, ருக்மிணிக்காக அரசமரம் அடைந்த விசாரம், நமக்கும் எழுகிறது...

சாந்திக்கு மார்க்கம் – 3

உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.....

பக்திப் பாடல்கள் -15, 16

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சிறியவை என்றபோதும் மிகவும் பொருள் பொதிந்தவை இந்த 15, 16 கவிதைகள்....

கண்ணே கலைமானே!

கவியரசு கண்ணதாசனின் கடைசித் திரைப்பாடல் இது...

சிவசக்தி பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்தி பாடல்களில் சிவகக்தி மீதான பாடல்கள் (11-14) இவை...

சாந்திக்கு மார்க்கம் – 2

மனித ஆன்மாவின் அமர்க்களத்தில் அகத்தின் ஆள்கைக்காகவும், அரசுக்காகவும், ஆதிபத்திய கிரீடத்திற்காகவும் இரண்டு தலைவர் அமர் புரிகின்றனர். அவரில் ஒருவன் 'யான்' என்னும் தலைவன்; 'இவ்வுலக அரசன்' என்றும் சொல்லப்படுபவன்; மற்றொருவன் மெய்ப்பொருள் என்னும் தலைவன்; தந்தையாகிய கடவுள் என்றும் சொல்லப்படுவான். 'யான்' என்னும் தலைவன்; காமம், கர்வம், பேராசை, வீண் பெருமை, பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக்கொண்டு கலகம் விளைப்பவன். மெய்ப்பொருள் என்னும் தலைவன் இனிமை, பொறுமை, தியாகம், பணிவு, அன்பு என்னும் ஒளிக்கருவிகளைக் கொண்டு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்......

பக்திப் பாடல்கள்- 9,10

மகாகவி பாரதியின் கவிதைகளில், ‘பக்திப் பாடல்கள்’ தொகுப்பில் உள்ள 9, 10 ஆம் கவிதைகள் இவை....

எனக்கு நிலா வேண்டும்- நூல் மதிப்புரை

குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.

வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த  ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.

இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.

முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.