பக்திப் பாடல்கள் -15, 16

-மகாகவி பாரதி

15. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்;
      நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
      தெளிந்த நல்லறிவு வேண்டும்;
பண்ணிய பாவமெல்லாம்
      பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
      நசித்திட வேண்டும் அன்னாய்!

$$$

16. பூலோக குமாரி

பல்லவி

பூலோக குமாரி ஹே அம்ருத நாரி!

அனுபல்லவி

ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே
கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.

சரணம்

பாலே ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பத நீரஜ மாலே
லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ, நிரந்தரே நிகில, லோகேசாநி
நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி, நிஜம் மாம் குருஹே மன்மத ராணி.

$$$

Leave a comment