இந்திய விடுதலைப் போராட்டம் ஹிந்து தேசிய சிந்தனைகளுடன், சநாதனக் கருத்துகளுடன் வார்க்கப்பட்டது என்கிறார் பாஜக நிர்வாகியும் சிந்தனையாளருமான திரு. ராம் மாதவ். தொடர்ந்து படியுங்கள் தர்க்கரீதியிலான அவரது கட்டுரையை...
Tag: திருநின்றவூர் ரவிகுமார்
நூல் அறிமுகம்: The Significance of Sri Aurobindo Ashram
மகரிஷி அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் வாழ்க்கையில் தொடங்கி அவர்களது கருத்தியல், அதற்காகத் தொடங்கப்பட்ட ஆசிரமம், ஆரம்பத்தில் அதனுடன் இணைந்தவர்கள், பல்வேறு கட்டங்களாக அதன் வளர்ச்சி, இன்றைய நிலை, ஆசிரமம் சந்திக்கும் சிக்கல்கள், எதிர்காலத் திட்டங்கள் என 14 அத்தியாயங்களில் முழுமையான வரலாற்றை எழுதி உள்ளார் கிருஷ்ணன்டு தாஸ்பட்நாயக்.
வந்தே மாதரத்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!
வல்லமை, செழிப்பு, அறிவு இம்மூன்றையும் தேவையில்லையென எந்த நாகரிகம் சொல்கிறது? தைரியம் வேண்டும் என்பதற்காக ஒரு முஸ்லிம் துர்க்கையை வழிபடத் தேவையில்லை. இந்தியா வளமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவர் லட்சுமியை வணங்க வேண்டியதில்லை. ஞானத்தை அடைவதற்காக ஒரு நாத்திகர் சரஸ்வதியைக் கும்பிட வேண்டியது இல்லை. இந்த உருவகங்கள் கலாச்சார ரீதியாக இந்தியா இவற்றின் மூலம் குறிப்பிடப்படுபவை; அனைவருக்கும் பொதுவானவை.... எழுதுகிறார் சமூக சேவகர் திருமதி கீதாஜ்சலி ஆங்மோ...
திமாகி நக்சல்கள்: யார் என்று சொல்லவும் வேண்டுமோ?
'நான் தமாகி நக்சல் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்' என்று முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருக்கிறார். 2013-இல் அவர் அமைச்சராக இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிரமாணத்தில், நக்சல் கருத்தியலாளர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதை அவர் மறந்து விட்டார் போலிருக்கிறது. திரு. ராம் மாதவின் கட்டுரை, சிதம்பரத்தின் நாடகத்தை தோலுரிக்கிறது...
அணுசக்தி: புதிய விடியலுக்கு அச்சாரம்
பண்டித நேருவும், இந்திரா காந்தியும் சோசலிசக் கொள்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியதால் 1990களில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இந்தியா சந்தை பொருளாதாரத்தை ஏற்கும்படி கட்டாயத்துக்கு உள்ளானது. இப்போது கொள்கைத் தவறுகளினால் அல்லாமல், உலகச் சூழலால் இந்தியா தாமாகவே சிந்தித்து தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி மாறி வருகிறது.... திருநின்றவூர் ரவிகுமாரின் கட்டுரை...
மோடியிசம்: இப்போதைய காலகட்டம்
பாஜகவும் தனது வெற்றிகளை அமைப்பு சார்ந்ததாக்க வேண்டும். என்னதான் அசைக்க முடியாதவர் என்றாலும் ஒரேயொரு ஆளுமையை மட்டும் சார்ந்து இருப்பது தேசிய கட்சிக்கு நல்லதல்ல. அமைச்சர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். நம்பத் தகுந்த மாநிலத் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். உட்கட்சி விவாதங்கள் நடக்க வேண்டும். அடுத்தடுத்து தலைவர்கள் மேலெழுந்து வரும் கலாச்சாரம் தேவை. கேப்டன் அமரீந்தர் சிங்கின் கட்டுரை...
சோசலிசம் என்னும் கைவிலங்கு
1955 இல் ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 'சோசலிச சமுதாயமே' தனது அரசின் லட்சியம் என்று தீர்மானம் இயற்றினார். அரசின் முன்னெடுப்பிலான வளர்ச்சியை வலியுறுத்தி கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியார் தொழில் முனைப்பை ‘பர்மிட் - லைசன்ஸ் – கோட்டா’ மூலம் கட்டுப்படுத்தும் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதன் விளைவுகள் விரைவில் வெளிப்பட்டன.
தியானமென் சதுக்கமும் ஜந்தர்மந்தரும்: இடதுசாரிகளின் இரட்டை வேடம்
தனது கருத்தியலுக்கு ஆதரவானவர்களுக்கு ஒன்றும், மற்றவர்களுக்கு வேறொன்றுமாக தார்மிக கோபத்தை தேவைக்கேற்ப வெளிப்படுத்துவது இந்திய இடதுசாரிகளின் நம்பகத் தன்மையையே சந்தேகப்பட வைக்கிறது. ஜனநாயகத்தைப் பற்றி அவர்கள் பேசுவது கருத்தியல் வசதிக்காகவே அன்றி ஜனநாயக மாண்பிற்காக அல்ல.
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் செய்தி என்ன?
எடின்பரோவில் (ஸ்காட்லாந்து) உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் உலகில் உள்ள மிகப் பழமையான மருத்துவக் கல்லூரி. 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதாக அறியப்படுகிறது. அது மகரிஷி சுஷ்ருதரை கௌரவிக்க முடிவெடுத்து கடந்த ஜூன் 2026 மாதம் அவரது உருவச் சிலையை நிறுவியது. 90 கிலோ எடை கொண்ட அந்த வெண்கலச் சிலை தமிழ்நாட்டில் உள்ள சுவாமிமலையில் வடித்தெடுக்கப்பட்டது.
புறவழி பேச்சுவார்த்தை: உண்மை என்ன?
உளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவுத் துறை தந்திரங்களில் ஒன்று. பல நாடுகள் இதை சிறப்பாகப் பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம், எதிரி நாடுகளில் உள்ளவர்களைக் குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.
சரளா பட் கொலை வழக்கு: தீர்க்க வேண்டிய கணக்கு இது மட்டுமல்ல!
சரளா பட் கொலை வழக்கு ஒரு விதிவிலக்காக, ஒரு குறியீட்டு மதிப்பாக அமைந்து விட்டால், மாற்றம், சீரமைப்பு போன்றவற்றிற்கு வலு குறைந்து விடும். மாறாக விரிவான வகையில் நிர்வாக அமைப்புகளிலும் முறைமைகளிலும் மாற்றம் ஏற்பட்டு மற்ற கொலை வழக்குகளும் விசாரிக்கப்படுமானால், 1990 காஷ்மீர் வன்முறை குறித்த கண்ணோட்டத்தில் அடியோடு மாற்றம் வரும்.
மீண்டும் கிளம்பும் மதமாற்ற விவாதம்
“வெளிநாட்டு நன்கொடைகளைப் பயன்படுத்தி மதம் சார்ந்த கட்டடங்களை (சர்ச் , மசூதி) கட்டலாம், பராமரிக்கலாம், புனித நூல்களை அச்சிடலாம், எண்ம (டிஜிட்டல்) மயமாக்கலாம், யாத்ரீகர் விடுதிகளைக் கட்டலாம், சமூக உணவுக் கூடங்களை நடத்தலாம், பழங்குடியினரின் உள்ளூர் பாரம்பரிய மரபுகளை வளர்க்கலாம். ஆனால் மதமாற்றம் செய்யக் கூடாது” என்கிறது FCRA சட்டத் திருத்தம்....
நரேந்திர மோடி பற்றி பிரணாப் முகர்ஜி
நீண்ட காலம் இந்தியப் பிரதமராக இருந்தது யார் என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2014 இல் பிரதமர் மோடியின் அமோக வெற்றியைப் பற்றி எனது தந்தை (அமரர்) பிரணாப் முகர்ஜி என்னிடம் கூறிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக இருந்தார். வெவ்வேறு அரசியல் கருத்தியல்களைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும் அவர்கள் இருவரிடையே சீரிய நல்லுறவு இருந்தது. அதுதான் உண்மையான ஜனநாயகத்தின் அடையாளம்.
ஆர்எஸ்எஸ் ஏன் பதிவு செய்யப்படவில்லை?
1925 இல் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்ட போது ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பது அதன் நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. எனவே அந்நிய அரசிடம் பதிவு செய்வது என்ற கேள்வியே எழவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பதிவு செய்யப்படாத அமைப்பாக இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது என்ற நிலையை மேற்கொண்டது. இதை இதுவரை இருந்துள்ள அரசுகள் அனைத்தும் ஏற்று வந்துள்ளன. இன்று யாரோ ஒருவர் இது பற்றி கேள்வி எழுப்பினால், அவர் அறியாமையில் அரசியல் லாபத்திற்காக கேட்பதாகவே கருதப்படும்.
அடுக்களையில் இருந்து அபாயப் படை
அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது, காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.