அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும்

தற்கால தமிழ் ஆய்வாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத் தக்கவர். ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய இவரது ஆய்வுகளும் நூல்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சுவாமி விவேகானந்தரையும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரை இங்கே...

பாஞ்சாலி சபதம்- 2.2.9

பாகன் மறுபடியும் அவையில் பாஞ்சாலியின் வாதத்தை வைத்தவுடன், துரியன் மேலும் கோபம் கொள்கிறான். பீமனுக்கு அஞ்சி பாகன் தயங்குவதாகக் கூறும் அவன், “பாஞ்சாலியை அழைத்துவர பாகனால் இயலாது. எனவே நீ சென்று அவளை இழுத்து வா?” என்று தம்பி துச்சாதனனிடம் ஆணையிடுகிறான். இரண்டாம் பாகத்தின் இரண்டாம் சருக்கம் இத்துடன் நிறைவெய்துகிறது...

பாரதியும் பாரதிதாசனும் – 3ஆ

வாழ்க்கையில் ஒருவன் சிறந்த குறிக்கோளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையான தொழிலில் ஈடுபட்டுத் தன் கடமையை நிறைவேற்று கின்றான். எத்தொழிலைச் செய்தாலும் அஃது இறைவன் பணியாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் அறியாதவர் அல்லர். இப்பேருண்மையைத் ’தேசமுத்துமாரி' என்ற பாடலில் 'யாதானும் தொழில் புரிவோம்; யாதும் அவள் தொழிலாம்’ என்று பேசுகிறார்.

புஸ்தகத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க!

ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு. முரளி சீதாராமன், நகைச்சுவை பொங்க எழுதுவதில் மன்னர். அதேசமயம், விஷயமில்லாமல் இருக்காது. புத்தகக் கண்காட்சி குறித்த இவரது நையாண்டிக் கட்டுரை இது…. சென்னை புத்தகத் திரு விழா தொடங்கி இருக்கிறது, போவோமா ஊர்கோலம்?

என்னே கொடுமை!

சுதேசமித்திரன் இதழில் 1906-இல் வெளியான கவிதை இது. இக்கவிதை எழுதியதற்கான குறிப்பையும் முதலிலேயே குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி.

நம்மாழ்வாரும் விவேகானந்தரும்

பேராசிரியர் திரு. டி.ஏ.ஜோசப், ‘ஸ்ரீ வைஷ்ணவச்சுடராழி’ என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்; பாண்டிச்சேரியில் வசிக்கிறார். பன்மொழித் தேர்ச்சி மிக்கவர்; கல்வியாளர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது அன்னார் எழுதிய கட்டுரை இது….  

பாஞ்சாலி சபதம் – 2.2.8

துரியனின் ஆணையை ஏற்று மீண்டும் தன்னிடம் வந்த பாகனிடம், ”சூதில் தருமன் தோற்ற பின்னர் என்னை மனைவி என்ற முறையில் சூதில் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை. நான் மன்ன துருபதனின் மகள். இந்த நியாயத்தைச் சொல்ல அரசவையில் ஒருவரும் இல்லையா?” என்று வினவுகிறாள் பாஞ்சாலி. “மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே- அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?” என்று பாஞ்சாலி கேட்பதாக கவிதை புனைகிறார் மகாகவி பாரதி. இதனை மீண்டும் அரசவைக்குச் சென்று அவையினரிடம் முன்வைக்கிறான் பாகன்...

உங்க பேர் என்ன? எந்த சேனல்?

பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்திலும் இளையராஜாவின் இசையிலும் தோய்ந்தவர். அவரது முகநூல் பதிவே இக்கட்டுரை….

இளசை ஒருபா ஒருபஃது  

‘ஒருபா ஒருபஃது’ என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும். இங்கு மகாகவி பாரதி, வெண்பாவில் அந்தாதியாகப் பாடி இருக்கிறார். இப்பாடல்களில்  காப்பு, பத்துப்பாடல்கள் ஆகியவை, இளசை எனப்படும் எட்டையபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனைக் குறித்துப் பாடியவையாக உள்ளன. இறுதியாக தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

பாரத பூமி பார்க்கெலாம் திலகம்!

தஞ்சையில் பாரதி இலக்கியப் பயிலரங்கம் நடத்திவந்த மூத்த எழுத்தாளர் அமரர் திரு. தஞ்சை வெ.கோபாலன் (1936- 2021) அவர்கள் சுவாமி விவேகானந்தரின் 150வ்து ஜெயந்தியின் போது எழுதிய கட்டுரை இது....

பாஞ்சாலி சபதம் – 2.2.7

அரசவைக்கு வர மறுத்த பாஞ்சாலி முன்வைத்த வாதத்தைக் கேட்டு சினம் கொண்ட துரியோதனன், பாகனை மீண்டும் சென்று அவளை அழைத்துவருமாறு ஏவுகிறான். அப்போது, “ஐவர் கூட்டு மனைவிக்கு நாணமேன்?- சினம் மூண்டு கடுஞ்செயல் செய்யுமுன்- அந்த மொய்குழ லாளைஇங் கிட்டுவா” என்று உத்தரவிடுகிறான்.

கடல் கண்ணிகள்- கவிதைக்கு முன்னுரை

மகரிஷி அரவிந்தர் எழுதிய ‘கடலுக்கு’ என்ற ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழியாக்கம் செய்த மகாகவி பாரதி (கடல் கண்ணிகள்), அதற்கு எழுதிய முன்னுரை இது.

விவேகானந்தர்: என்றும் வாழும் இளமை

திரு. ஜெயமோகன், தமிழின் முன்னணி எழுத்தாளர்; திரைக்கதை வசனகர்த்தா. ‘தி இந்து- தமிழ்’ நாளிதழில் 2014-இல் இவர் எழுதிய கட்டுரை நன்றியுடன் இங்கு மீள்பதிவாகிறது.

பாஞ்சாலி சபதம் – 2.2.6

பாஞ்சாலியை அவைக்கு அழைத்து வருமாறு ஏவிய துரியனைக் கண்டு சினம் கொண்ட நடுநிலை நாயகரான விதுரன், ”மூட மகனே, நீ செய்வது தகாது. பாண்டவர் உன்னை மாய்க்கும் முன்னம் அவர்களிடம் பறித்ததை திருப்பி அளி” என்று அறிவுறுத்துகிறார். உடனே, விதுரனை மடையனென்று விளம்பிய துரியன் தேர்ப்பாகனை அழைத்து, ‘பாஞ்சாலியை அவைக்கு வருமாறு வேந்தன் பணித்ததைக் கூறு’ என்கிறான். தேர்ப்பாகனால் நடந்த இழிவை அறிந்த பாஞ்சாலி, “மாண்பிழந்த நாயகர்தாம்- என்னைமுன்னே கூறி இழந்தாரா? தம்மையே -முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?” என்று பதிலறிந்து வருமாறு பாகனிடம் கூறுகிறாள். அதாவது, ஏற்கனவே அடிமைப்பட்டவனுக்கு பிறரை- குறிப்பாக மனைவியை- அடிமையாக்கும் சுதந்திரம் இல்லை என்பதே பாஞ்சாலியின் கருத்து.

வந்தேமாதரம்

இக்கவிதை பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுதிகளில் காணப்படாதது. ‘சக்கரவர்த்தினி’ மகளிர் மாத இதழிலும், ‘சுதேசமித்திரன்’ நாளிதழிலும் வெளியான பாரதி பாடல் இது…