சிவகளிப் பேரலை- 83

ஒற்றைக் கடவுளைத்தான் நாம் பல்வேறு நாமரூபங்களில் அழைத்தாலும், அவற்றில் எல்லாம் சிறப்பானதாகவும், அனைத்திற்கும் மேலான தத்துவமாகவும் விளங்குவது சிவபரம்பொருள்தான். சிவ தத்துவத்தில்தான் இறைத்தன்மை முழுவதுமாக வெளிப்பட்டு நிற்கிறது. அதனால்தான் சிவபெருமான் மகாதேவர், பரமேஸ்வரர், சர்வேஸ்வரர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இதே காரணத்தால்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பழையோன், பிறவா யாக்கைப் பெரியோன், முக்கண் முதலோன் என்றெல்லாம் எந்தை சிவபிரானை ஏற்றித் துதிக்கின்றன....

நூற்றைம்பதிலும் இளமை குன்றாத விவேகானந்தர்

இந்தியாவின் உயிர்நாடி மதமும், ஆன்மீகம்தான் என்று பலமுறை விவேகானந்தர் அறிவுறுத்தியிருக்கிறார். பொருளாதாரத்தில் பலம் பெற்று வரும் இந்தியா ஆன்மீகத்தின் பக்கமும் தனது கவனத்தை கூடுதலாகத் திருப்பிக்கொள்ள வேண்டும்....

பாரதி- அறுபத்தாறு (15-18)

அத்வைதப் பேரானந்தத்தின் உச்சநிலையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல் இது... ‘எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்’ என்ற பாரதியின் தாரக மந்திரம் ஒலிக்கும் கவிதையும் கூட...

சிவகளிப் பேரலை- 82

ஒரே ஆற்றல்தான் நிலைசக்தியாகவும், இயங்குசக்தியாகவும் திகழ்கிறது. (ஆயினும் நிலைசக்திதான் இயங்குசக்திக்கு ஆதாரம்.) இதுதான் ஹரிஹர தத்துவம். இதனையே சிவசக்தி என்று இணைத்துக் கூறுவார்கள். சக்தியைப் பெண்பாலாகக் கூறுவதற்குப் பதில், ஆண்பாலாகவே சுட்டும்போது அந்த சக்தி, ஹரி என்று கூறப்படுகிறது.  இதனால்தான் சக்தியின் சகோதரராக விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.

சுவாமி விவேகானந்தரின் இன்றைய அவசியம்

நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்களை சுவாமி விவேகானந்தருடன் மானசீகமாக இணைத்துக் கொள்வது இன்றளவும் நடந்து வருகிறது. அவர்கள் எல்லாம் வெவ்வேறு விதமான பின்னணிகளைக் கொண்டவர்கள். அவர்களின் மாநிலங்கள், மொழிகள், தொழில்கள், படிப்புகள் எனப் பலவும் வேறு. ஆனால் அவர்கள் அனைவருமே சுவாமி விவேகானந்தரின் கருத்துகள், செயல்பாடுகள் அல்லது அவரது ஆளுமை ஆகியவற்றால் கவரப்பட்டவர்கள். எனவே நாடு முழுவதும் அதிகம் பேரால் பரவலாக அறியப்பட்ட உதாரண புருஷராக அவர் இன்றளவும் விளங்கி வருகிறார்....

புதிய யுத்த முறைமை

இக்கட்டுரையில் ஸ்ரீ கணேச தாமோதர ஸவர்க்கர் என்று மகாகவி பாரதியால் குறிப்பிடப்படுபவர், சுதந்திரப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கரின் அண்ணன் கணேச தமோதர சாவர்க்கர் ஆவார்.  ஸ்ரீ கணேச தாமோதர சாவர்க்கர் ஆங்கிலேயரை எதிர்த்து எழுதியதற்காகவே அவர் மீது எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கையை எள்ளல் தொனியில்  மகாகவி பாரதி விமர்சித்திருப்பதை இக்கட்டுரையில் காணலாம். 

சிவகளிப் பேரலை- 81

நமது வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான். அதன் விடை என்ன? அதற்கு அர்த்தம் என்ன? பல தொல்லைகள் நிறைந்த இந்த சம்சார சாகரத்தை (வாழ்க்கைக் கடலை) கடப்பதற்கான விடையை, இந்தப் பிறவிப் பிணிக்கு விடை கொடுப்பதற்கான விடையை இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டும் என்பதுதான் நமது வாழ்க்கையின் அர்த்தம். வாழ்வுப் பிணிக்கு விடை கொடுக்கும் அந்த வாழ்வுவிடையை (ஜீவன் முக்தியை) எப்படிப் பெறுவது? சிவபெருமான் மீதான ஆழ்ந்த பக்தியின் மூலம்தான் எந்த பக்தனும், ஜீவன் முக்தனாக முடியும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

கோப்பையிலே என் குடியிருப்பு

திரையிசைப் பாடல்களில் சக்கரவர்த்தியான கவியரசு கண்ணதாசன் அவர்களின் சுய வாக்குமூலமாக ‘ரத்ததிலகம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது...

பாரதி- அறுபத்தாறு (11-14)

புதிய ஆத்திசூடியில் “ரௌத்திரம் பழகு” (96) என்று சொன்ன அதேபாரதி, தனது சுயசரிதைக் கவிதையான பாரதி-அறுபத்தாறில், பொறுமையின் அவசியம் குரித்து இக்கவிதையைப் படைத்திருக்கிறார். “கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான் கொல்வதற்கு வழியெனநான் குறித்திட்டேனே”- என்கிறார் இப்பாடலில்.

சிவகளிப் பேரலை – 80

முந்தைய ஸ்லோகத்தில் மென்மையான சிவனின் திருப்பாதங்கள், எமனின் முரட்டு மார்பை எப்படி மிதித்தன? என்று வியந்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தனின் மனம் பல்வேறு எண்ணங்களாலும், அனுபவத்தாலும் கடினமாகத் திகழ்கிறதே, அதில் எப்படி அவர் நடனமிடுவார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் தருகிறார்....

மகாவித்துவான் சரித்திரம்- 1(6)

இவர் சில அன்பர்களுடன் ஒரு தினம் திருவானைக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகப் புறப்பட்டுக் காவிரியின் தென்பாலுள்ள ஓடத்தில் ஏறியபொழுது உடனிருந்த சிதம்பரம்பிள்ளை யென்னுங் கனவான் இவரை நோக்கி ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் மீது ஒரு மாலை இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்; அப்பொழுது உடன் சென்றவருள் ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வருவதற்குள் சோணசைலமாலையைப் பாடிமுடித்தது போல் நீங்கள் சம்புநாதரைத் தரிசனஞ் செய்து திரும்புவதற்குள் அம் மாலையைச் செய்வதற்கு இயலுமா?" என்று கேட்டார். இவர் நேருமானாற் செய்யலாமென்று சொல்லிப் பாடத்தொடங்கி, எழுதியும் எழுதுவித்துக்கொண்டும் சென்று கோயிலுக்குப்போய்த் தரிசனம் செய்த பின்பு, சில நாழிகை அங்கே ஓரிடத்தில் தங்கிப் பாடல்களைச் செய்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வீடுவந்து சேர்வதற்குள் அந்நூலை முடித்தனரென்று சொல்வார்கள்.

சிவகளிப் பேரலை- 79

எமனின் முரட்டு மார்பை மிதித்ததனால் சிவனே, உனது மென்மையான பாதங்கள் வலிக்கின்றனவா? அவற்றை என் முன்னே காட்டிடுவாய், எங்கும் நிறைந்தவனே (விபோ), அவற்றை எனது கரங்களால் பிடித்து விடுகிறேன் என்று இந்தப் பாடலில் கொஞ்சுகிறார் ஆதிசங்கரர்.

எனது முற்றத்தில் – 14

குருக்ஷேத்திர  பகவத் கீதை முற்றோதல்  நடத்திய ஆந்திர அன்பரைப் பற்றி சொல்லத் தொடங்கி அவர் குடும்பம் பற்றி விவரித்து … தமிழில் எழுதிக்கொண்டே போகும்போது, பாரத கலாச்சார வியாபகம் எவ்வளவு அபார சக்தி கொண்டது என்பது உறைத்தது. மாநில வேலிகள் எல்லாம் எங்கோ கரைந்து மறைய… (இந்த சம்பவச் சங்கிலியில்   அமெரிக்காவும் ஒரு களம் என்பதால்) உலகு தழுவிய பாரதீய கலாச்சாரம் என்னைப் பார்த்துப் புன்னகைத்தது. ....

பாரதி- அறுபத்தாறு (7-10)

-மகாகவி பாரதி பாரதி அறுபத்தாறு (7-10) அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்      அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்;மிச்சத்தைப் பின் சொல்வேன், சினத்தை முன்னே      வென்றிடுவீர், மேதினியில் மரணமில்லை;துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,      சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.      நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.       7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் .செத்திடுவா ரொப்பாவார்; … Continue reading பாரதி- அறுபத்தாறு (7-10)

சிவகளிப் பேரலை- 78

பக்தியினால் பக்தனின் மனது அல்லாடுவதை முந்தைய ஸ்லோகத்தில் விவரித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், புதிதாகத் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணைப்போல பக்தனின் புத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்....