பாரதியின் தனிப்பாடல்- 5

-மகாகவி பாரதி

5. புயற் காற்று

நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு

ஒரு கணவனும் மனைவியும்

மனைவி:
காற்றடிக்குது, கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.

கணவன்:
வானம் சினந்தது; வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.

மனைவி:
நேற்றிருந் தோம் அந்த வீட்டினிலே, இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s