மறைந்த (அதாவது மறைந்து போனதாகக் கருதிய) மனைவிக்கு நினைவில்லம் கட்டுகிறான் கணவன். அவனது நினைவில் வந்து பாடுகிறாள் அவனது மனைவி. இதுதான் இதயகமலம் படத்தின் காட்சி அமைப்பு. அதற்கு ஏற்ற உருக்கமான மெல்லிசை திரு. கே.வி.மகாதேவன். கிடைத்த வாய்ப்பில் ஓர் அற்புத வாழ்வியல் கவிதையைப் படைத்திருக்கிறார் கவியரசர். எவ்வளவு அழகிய சொற்கள்? எத்துணை தூய காதல் இந்த வரிகளில்?...
Month: October 2022
ஜப்பானியக் கவிதை
‘ஹைகூ’ எனப்படும் மூன்றடிக் கவிதை, ஜப்பானிய கவிதை இலக்கியத்தின் உச்சம். சுருக்கமான சொற்களில் பெரும் உருவகத்தை அடக்கிக் காட்டுவதே ஹைகூவின் உத்தி. ஜப்பானிய ஜென் மதத்தின் தாக்கம் இக்கவிதைகளில் உண்டு. இதனை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழுக்கு மகாகவி பாரதி அறிமுகப்படுத்தி இருப்பது வியப்பளிக்கிறது. இக்கட்டுரை, ஹைகூ குறித்த புரிதலில்லாமல், மடக்கி மடக்கி ஏதாவது கிறுக்கும் நம் தமிழர்களுக்கு ஒரு பாடம்...
கொன்றைவேந்தன் (1-5)
தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதிய விளக்கவுரை நமது தளத்தில் வெளியாகிறது...
மகாவித்துவான் சரித்திரம்- பாகம் 2 (முகவுரை)
தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரை உருவாக்கியவர், திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அவரது வீட்டில் குருகுலவாசம் இருந்து தமிழ் கற்ற உ.வே.சா. பிற்காலத்தில், தமிழுக்கு அணியாகத் திகழும் பல இலக்கியங்களை கால வெள்ளத்தில் மறையாமல் பதிப்பித்துக் காத்தார். உ.வே.சா. தனது குருநாதரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தகுந்த ஆதாரங்களுடனும் எழுதிய நூல் இது. “திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்” என்பதே ஐயர் அளித்த தலைப்பு. இங்கு நமது வசதிக்காக, ‘மகாவித்துவான் சரித்திரம்’ என்று குறிக்கப்படுகிறது. இந்நூலில் தனது குரு மீதான பக்தியை சீடர் வண்ணமுற வெளிப்படுத்துகிறார். வாழையடிவாழையென வந்துதித்த மரபால் நமது தாய்த் தமிழ் மொழி காக்கப்பட்டு வந்துள்ளது என்பதற்கு மிகச் சரியான சான்றான இந்நூல், நமது தளத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. முதல் பாகம் முடிந்து, இரண்டாம் பாகம் இன்று தொடங்குகிறது...
எனது முற்றத்தில்- 25
இதை வாசிக்கும்போதே, 'கோயில் வாசல் பிரசாத விநியோக விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுக்கோப்பு நிலவினால் எப்படி இருக்கும்!' என்று உங்கள் மனதில் கற்பனை அரும்பாமல் இருந்தால் தான் ஆச்சரியம். ஒழுங்கும் கட்டுப்பாடும் எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. யாராவது ஒருத்தர் வந்து அதில் பயிற்சி கொடுக்க வேண்டியிருப்பது இன்றைய நிலை. சமுதாயம் சதா சுயமாக ஒருங்கிணைந்து இயங்கும் பொற்காலம் வராமலா போகப் போகிறது?
சத்திய சோதனை- 4(36-41)
-மகாத்மா காந்தி நான்காம் பாகம் 36. பிராயச்சித்தமாகப் பட்டினி பையன்களையும், பெண்களையும் சரியான வழியில் வளர்த்து அவர்களுக்குக் கல்வி போதிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பது நாளுக்கு நாள், மேலும் மேலும் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது. அவர்களுக்கு உண்மையான உபாத்தியாயராகவும் பாதுகாப்பாளராகவும் இருக்க வேண்டுமாயின், நான் அவர்களுடைய உள்ளங்களைத் தொட வேண்டும். அவர்களுடைய இன்ப துன்பங்களில் நான் பங்கு கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் நான் உதவி செய்ய வேண்டும். இளமையின் காரணமாக அவர்களுக்கு … Continue reading சத்திய சோதனை- 4(36-41)
புதுப் பேய்
வேதபுரம் (புதுவை) தொடர்பான இன்னொரு கதை இது. எலிக்குஞ்சு செட்டியாரின் மகள் காந்திமதிக்கு பிடித்த பேய் இன்னதென்று கண்டறிய முடிகிறதா? படியுங்கள், மகாகவி பாரதியின் நையாண்டி புலப்படும்!
உலகமயச் சூழலில் விவேகானந்தரின் தேவை
அமரர் திரு. பி.பரமேஸ்வரன் (1927 அக். 3 – 2020 பிப். 9), ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த தலைவர்; சிந்தனையாளர். திருவனந்தபுரத்தில் இயங்கும் பாரதீய விசார் கேந்திரத்தின் நிறுவனர். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் தலைவராக செயல்பட்டவர். 2012-இல் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது ஆங்கிலத்தில் அவர் எழுதிய இக்கட்டுரையை திரு. சத்தியப்பிரியன் தமிழில் வழங்கியுள்ளார்....
கொன்றைவேந்தன் – மூலம்
தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. 91 வரிகளால் ஆன சிறு நூல் இது.
தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா?
முதலில் ஒரு விஷயத்தை தெளிவு செய்துகொள்வோம்: திராவிடம் என்பது இனமல்ல. தமிழ் என்பதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்தான் அது. திராவிடம் தனி இனம் என்றால் அதனைக் குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
ஸ்வதந்திர கர்ஜனை-1(8)
லக்னோ நகரம் முழுவதும் தேசபக்தர்கள் எல்லாவிடங்களிலும் பரவி நின்று கடுமையானதொரு போருக்கு ஆயத்தமானார்கள். ஆங்காங்கே எதிரிப் படைகள் சுலபமாக முன்னேற விடாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள்ளிருந்து துப்பாக்கியால் சுடுவதற்கு சுவர்களில் துவாரங்கள் போடப்பட்டு அங்கெல்லாம் சிப்பாய்கள் தயாராய் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள்....
பாரதி கடிதங்கள்- தொகுப்பு – 4
பெண்களின் இளம்வயது திருமணத்தை கடுமையாகக் கண்டித்த மகாகவி பாரதி, ஸ்ரீமான் ஸ்ரீநிவாச சாஸ்திரியாரின் முன்னுதாரணமான செய்கையைப் பாராட்டி ‘சுதேச மித்திரன்’ இதழின் ஆசிரியருக்கு எழுதிய வாசகர் கடிதம் இது...
அவருடைய அடிச்சுவட்டில்…
ஸ்ரீ. தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார் (1903- 1991), திருப்பூரைச் சார்ந்தவர்; விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி; தமிழக கல்வி அமைச்சராக இருந்தவர்; கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் அமையக் காரணமானவர்; பெண்கல்விக்காக இவர் துவங்கிய கல்லூரி, இன்று அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகமாக வளர்ந்துள்ளது. சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை கொங்கு மண்டலத்தில் பரப்பியதில் இவரது பங்கு அளப்பரியது. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே...
உஜ்ஜியினி
நூறாண்டுகளுக்கு முன்னமே, பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த இதழாளர் மகாகவி பாரதி. ”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்...” என்று முரசுப் பாட்டில் முழங்கும் கவிஞர், பெண் விடுதலைக்காக பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறார். ஆணும் பெண்ணும் நிகர் என்று அன்றே அறிவுறுத்திய மகாகவியின் கதை இது...
குறைப் பிறவி
மனிதன் வெளிப்புற உடல் அழகில் லயிக்கிறான். அதேசமயம், அதே தோற்றம் குரூரமாக இருந்தால் குமைகிறான். இவையெல்லாம், அறிவு முதிர்ந்த மனிதர்களுக்குத் தான்; பச்சிளம் குழந்தைகளுக்கும், விலங்குகளுக்கும் அழகு- குரூரம் என்ற பேதம் இருப்பதில்லை. அதன் காரணம், ஒருவேளை அவற்றின் அறிவு முதிர்ச்சி வழக்கமான மனிதர் போல இல்லாததால் தானோ என்னவோ? இச்சிறுகதையில், கோர சொரூபத்தால் விலக்கி வைக்கப்பட்ட வீட்டு வேலைக்காரி செல்லியின் தியாகம் மூலமாக, ஜெயகாந்தன் எந்த உபதேசமும் செய்யாமலே, மனிதத்தன்மை என்னவென்று புரிய வைக்கிறார்….