இந்தியாவில் ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர், சைதன்யர், குருநானக், புத்தர், மகாவீரர் போன்ற மதச்சாரியர்கள் மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியை, மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....
Month: September 2022
அர்ஜுன சந்தேகம்
ஒரே கேள்விதான். ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில்கள். ஆனால் அனைத்திலும் லோக நன்மை தான் பிரதானம். இது சிறிய கதை தான். ஆனால், இந்த சிரு வித்துக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் பிரமாண்டமானது.
மகாவித்துவான் சரித்திரம்- 1(22)
அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.....
தராசு கட்டுரைகள்- 7
மேலும் அறிவுத் தராசு போட்டு, உலக வாழ்க்கையின் விதிகளையும், சிரமங்களையும், நிறுத்துப் பார்ப்பதே உனது தொழிலென்பதை மறந்து, வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய். புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? வயிர வியாபாரி ஒரு மாதம் நல்ல வியாபார மில்லாவிட்டால் மொச்சைக் கொட்டைச் சுண்டல் விற்கப் போவானோ? காளிதாசா, கவனத்துடன் கேள். ...
எனது முற்றத்தில்- 21
சுயநலமே இல்லாமல் மற்றவர்களின் துயர் துடைக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டால் சித்த சுத்தி வாய்க்கும் என்பார் காஞ்சி மஹாசுவாமிகள். சித்த சுத்தியால் தெய்வ தரிசனம் கைகூடும் என்றும் மகான்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அனைவருக்குமான ஆன்மிக ராஜபாட்டை இதுதான். அதில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் அவரவர் கர்மவினைப் பலனுக்கு ஏற்ப உயரங்களை அடைகிறார்கள் என்பது அனுபவபூர்வமான ஹிந்துத்துவ ஞானம்....
குதிரைக் கொம்பு
மகாகவி பாரதி காலத்திலேயே ஹிந்துப் புராணங்களையும் இதிகாசங்களையும் மனம் போன போக்கில் எழுதி தூஷிக்கும் கும்பல் இருந்தது. இன்று தமிழகத்தில் இருக்கும் நாத்திகக் கும்பலின் தொடக்கம் அது. அநேகமாக மகாகவி பாரதி அயோத்திதாச பண்டிதரின் புளுகுமூட்டைகளைப் படித்திருப்பார் போலிருக்கிறது. ‘குதிரைக்கொம்பு’ என்னும் இந்தச் சிறுகதை வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும், இப்படிச் சிந்திக்கும் முட்டாள்களும் இருப்பதையே பாரதி பகடியாகப் பதிவு செய்திருக்கிறார்....
கங்கை, யமுனை, இங்குதான் சங்கமம்…
கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...
தராசு கட்டுரைகள்- 6
தராசு சொல்வதாயிற்று:- தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கைகால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்க வேண்டும்.
இருள்
கடமையைச் செய்- செய்துகொண்டே இரு. இதுவே மகாகவி பாரதியின் இக்கதை உபதேசிக்கும் மந்திரம்.
மகாவித்துவான் சரித்திரம்- 1(21 ஆ)
திருவாவடுதுறையிலிருக்கையில் சில அன்பர்களுடைய வேண்டுகோளின்படி அந்த ஆதீனத்து முன்னோர்களாகிய ஸ்ரீ மெய்கண்டதேவர் முதல் வேளூர்ச்சுப்பிரமணிய தேசிகரிறுதியாக இருந்த ஞானாசிரியர்கள் சிவபதமடைந்த மாதம், நட்சத்திரம், சமாதித்தல மென்பவற்றை முறையே யமைத்து, ‘திருவளர் கைலைச் சிலம்பு’ என்னும் தலைப்பையுடைய அகவலொன்றை இயற்றி அளித்தனர். அது குரு பரம்பரை அகவலென வழங்கும்; அவ்வகவல் அச்சிற் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.....
தேவ விகடம்
தேச விடுதலை, சமூக சீர்த்திருத்தம், தமிழ் மீது தணியாத பற்று, பண்பாட்டுச் சீரழிவு குறித்த கவலை, உலக நாடுகளின் வளர்ச்சி - என்றெல்லாம் ஓயாமல் சிந்தித்தும் எழுதியும் வந்த மகாகவி பாரதியின் மனதில் இருந்த குழந்தைத்தனமும் நகைச்சுவை உணர்வும் இக்கதையில் வெளிப்படுகின்றன...
அகல்யை
புராணக் கதைகளை மீள்பார்வை செய்வது இலக்கியத்தில் ஒரு புதிய போக்கு. தமிழ்ச் சிறுகதை உலகின் முடிசூடா மன்னரான புதுமைப் பித்தனும் இதில் விலக்கல்ல. அவரது ‘சாப விமோசனம்’ சிறுகதை, அது வெளிவந்த காலத்தில் (1943) பெரும் விவாதத்தையும் சிந்தனைப் புரட்சியையும் உருவாக்கியது. அக்கதையில், அகலிகையின் பார்வையில் “ஆணுக்கு ஒரு நீதி, பெண்னுக்கு ஒரு நீதியா?” என்று கேட்ட புதுமைப் பித்தன், அதே அகலிகை கதையை மீண்டும் ‘அகல்யை’ என்ற சிறுகதையாகத் தீட்டுகிறார். இதில் அகலிகையின் கணவரான கௌதமனை நியாய உணர்வுள்ள ஆணாகச் சித்தரிக்கிறார். இனி கதைக்குள் செல்லுங்கள்!
தராசு கட்டுரைகள்- 5
தராசு சொல்லலாயிற்று:- "ஸ்ரீமான் காந்தி நல்ல மனுஷர். "அவர் செல்லுகிற சத்ய விரதம், அஹிம்சை. உடைமை மறுத்தல். பயமின்மை- இந்த நான்கும் உத்தம தர்மங்கள்- இவற்றை எல்லோரும் இயன்ற வரை பழகவேண்டும். ஆனால் ஒருவன் என்னை அடிக்கும்போது நான் அவனைத் திரும்பி அடிக்கக் கூடாதென்று சொல்லுதல் பிழை....
சத்திய சோதனை- 4(16-20)
மக்களோ, மிகவும் பயந்து போயிருந்தனர். ஆனால், நான் அடிக்கடி போய்க் கொண்டிருந்தது அவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஏழைகள் பலர், தங்களிடமிருந்த சிறு பொருள்களையெல்லாம் புதைத்து வைத்துவிடுவது வழக்கம். அவற்றையெல்லாம் தோண்டி எடுக்க வேண்டியிருந்தது. அவர்களுக்குப் “பாங்கு”கள் இல்லை. “பாங்க்” என்பது இன்னது என்றே அவர்களுக்குத் தெரியாது. நானே அவர்களுடைய ‘பாங்க்’கரானேன். ஏராளமான பணம் வந்து என் அலுவலகத்தில் குவிந்தது.....
தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி
மனித சமுதாயத்தின் புராதனமான புனித நூல்களான வேதங்களில் ரிஷிகள் ‘படைப்பு முழுவதும் இறைவனே’ - ‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம’ என்று கூறுகிறார்கள். ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகம் அடிப்படையானதாகவும், பிரிக்க முடியாததாகவும் இருக்கிறது என்பது இதன் பொருள். அதனாலேயே சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் பல சொற்பொழிவுகளிலே மனிதனின் தெய்விகத்தை மீண்டும் மீண்டும் உறுதிபடக் கூறினார்....