-சேக்கிழான்

புதிய பார்வையில் புதிய ஆத்திசூடி
3. நலம் விழையும் நாயகர்
இனி நாம் ‘புதிய ஆத்திசூடி’யை 7 அம்சங்களாகத் தொகுத்துக் கொள்ளலாம். இந்தத் தலைப்புகளுக்குள், பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ வரிகள், அவற்றின் மூல எண்களுடன் பட்டியலிடப்படுகின்றன.
அ. பண்புநலம் கூறுபவை: 21
1. அச்சம் தவிர்
2. ஆண்மை தவறேல்
14. காலம் அழியேல்
16. கீழோர்க்கு அஞ்சேல்
26. சாவதற்கு அஞ்சேல்
27. சிதையா நெஞ்சு கொள்
37. ஞமலி போல் வாழேல்
39. ஞிமிரென இன்புறு
40. ஞெகிழ்வது அருளின்
46. துன்பம் மறந்திடு
45. தீயோர்க்கு அஞ்சேல்
47. தூற்றுதல் ஒழி
51. தொன்மைக்கு அஞ்சேல்
72. பேய்களுக்கு அஞ்சேல்
73. பொய்மை இகழ்
76. மானம் போற்று
84. மோனம் போற்று
85. மௌட்டியம் தனைக் கொல்
95. ரோதனம் தவிர்
96. ரௌத்திரம் பழகு
110. வௌவுதல் நீக்கு
ஆ. உடல்நலம் வலியுறுத்துபவை: 17
3. இளைத்தல் இகழ்ச்சி
5. உடலினை உறுதி செய்
6. ஊண் மிக விரும்பு
9. ஐம்பொறி ஆட்சி கொள்
12. ஔடதம் குறை
17. குன்றெனெ நிமிர்ந்து நில்
23. கோல்கைக்கொண்டு வாழ்
38. ஞாயிறு போற்று
53. தவத்தினை நிதம் புரி
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
80. மூப்பினுக்கு இடங்கொடேல்
83. மொய்ம்புறத் தவம் செய்
88. யௌவனம் காத்தல் செய்
92. ருசிபல வென்றுணர்
93. ரூபம் செம்மை செய்
106. வீரியம் பெருக்கு
இ. அறிவுநலம் வளர்ப்பவை: 13
13. கற்றது ஒழுகு
25. சரித்திரத் தேர்ச்சி கொள்
33. சைகையிற் பொருளுணர்
35. சோதிடம் தனை இகழ்
57. நீதிநூல் பயில்
59. நூலினைப் பகுத்துணர்
75. மந்திரம் வலிமை
89. ரஸத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜஸம் பயில்
94. ரேகையிற் கனிகொள்
98. லாவகம் பயிற்சி செய்
101. (உ)லோக நூல் கற்றுணர்
104. வானநூல் பயிற்சி கொள்
ஈ. நடைநலம் நாடுபவை: 13
8. ஏறுபோல் நட
11. ஓய்தல் ஒழி
19. கெடுப்பது சோர்வு
28. சீறுவோர்ச் சீறு
36. சௌரியம் தவறேல்
42. தன்மை இழவேல்
43. தாழ்ந்து நடவேல்
58. நுனியளவு செல்
60. நெற்றி சுருக்கிடேல்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக்கு இடங்கொடேல்
77. மிடிமையில் அழிந்திடேல்
91. ரீதி தவறேல்
உ. எண்ணநலம் விதைப்பவை: 13
7. எண்ணுவதுயர்வு
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்து செய்
34. சொல்வது தெளிந்து சொல்
52. தோல்வியிற் கலங்கேல்
54. நன்று கருது
56. நினைப்பது முடியும்
61. நேர்படப் பேசு
62. நையப் புடை
78. மீளுமாறு உணர்ந்து கொள்
81. மெல்லத் தெரிந்து சொல்
100. (உ)லுத்தரை இகழ்
107. வெடிப்புறப் பேசு
ஊ. சமூகநலம் விழைபவை: 15
4. ஈகை திறன்
10. ஒற்றுமை வலிமையாம்
15. கிளை பல தாங்கேல்
18. கூடித் தொழில் செய்
21. கைத்தொழில் போற்று
29. சுமையினுக்கு இளைத்திடேல்
32. சேர்க்கை அழியேல்
65. பணத்தினைப் பெருக்கு
66. பாட்டினில் அன்பு செய்
74. போர்த்தொழில் பழகு
82. மேழி போற்று
87. யாரையும் மதித்து வாழ்
97. லவம் பல வெள்ளமாம்
99. லீலை இவ்வுலகு
103. வருவதைப் பகிர்ந்துண்.
எ. கடமைநலம் விதிப்பவை: 18
20. கேட்டிலும் துணிந்து நில்
22. கொடுமையை எதிர்த்து நில்
24. கௌவியதை விடேல்
41. ஞேயம் காத்தல் செய்
44. திருவினை வென்று வாழ்
48. தெய்வம் நீயென்று உணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வு செய்
55. நாளெலாம் வினை செய்
69. புதியன விரும்பு
70. பூமி இழந்திடேல்
71. பெரிதினும் பெரிது கேள்
79. முனையிலே முகத்து நில்
86. யவனர்போல் முயற்சி செய்
102. லௌதிகம் ஆற்று
105. விதையினைத் தெரிந்திடு
108. வேதம் புதுமை செய்
109. வையத் தலைமை கொள்.
அதாவது, பண்பு நலம், உடல்நலம், அறிவுநலம், நடைநலம், எண்ணநலம், சமூகநலம் ஆகியவற்றை வளர்ப்பதன் வாயிலாக, கடமைநலத்தை நிறைவேற்ற மகாகவி பாரதி வலியுறுத்துகிறார் எனலாம்.
அடுத்த அத்தியாயத்தில் இவற்றைத் தொகுத்தும் விரித்தும் பொருள் காணலாம்.
$$$