-கவியரசு கண்னதாசன்

அண்ணன் - தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை தனது அமரத்துவமான கவிதை வரிகளால் காவியம் ஆக்கியவர் கவியரசு கண்ணதாசன். திரைப்பாடலிலும் கூட, உயர்தரமான இலக்கியச் சுவையை வழங்க முடியும் என்று காட்டிய இப்பாடல், தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரையுலகிற்கு ஒரு நினைவூட்டும் அமுதப் பேரொளி.
$$$
அண்ணன்:
மலர்ந்தும் மலராத பாதி மலர்
போல வளரும் விழி வண்ணமே! வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலையன்னமே!
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே! வளர்ப்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே!
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
ஆளப் பிறந்தாயடா-
புவி ஆளப் பிறந்தாயடா!
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா!
அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு…
அத்தை மகளை மனம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப்பிறந்தாயடா, வாழப்பிறந்தாயடா!
தங்கை:
தங்கக் கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்-
பொருள் தந்து மணம் பேசுவார்!
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்! உலகை விலை பேசுவார்!
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்!
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக…
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்!
அண்ணன்:
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி
நடந்த இளம்தென்றலே! வளர்ப்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
கண்டு பொலிந்த தமிழ் மன்றமே!
தங்கை:
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடை வந்து பிரித்த
கதை சொல்லவா?
பிரித்த கதை சொல்லவா?
அண்ணன்:
கண்ணில் மணி போல மணியின் நிழல் போல
கலந்து பிறந்தோமடா!
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க முடியாதடா!
உறவைப் பிரிக்க முடியாதடா!
திரைப்படம்: பாசமலர் (1961)
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடகர்கள்: டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா.
நடிப்பு: சிவாஜி கணேசன், சாவித்ரி.
.
$$$