அந்த அதிகாரியின் கூற்றுப்படி முஸ்லிம் பெண்களின் தற்கொலைப் படை தயாராகி வருகிறது. அவர்கள் வெடிகுண்டுக் கிடங்குகள், ஆயுதங்கள் நிரம்பிய காவல் நிலையங்களைத் தாக்குவது, காஷ்மீர் மட்டுமின்றி இந்தியாவெங்கும் பயங்கரவாதிகள் பயணிக்க போக்குவரத்து, வாகன வசதிகளைச் செய்வது, பாதுகாப்பான தங்கும் இடங்களை ஏற்படுத்தித் தருவது, தொலைதொடர்பு சாதனங்களை அவர்களுக்குத் தருவது, ஆதரவாளர்களைத் திரட்டி அவர்களைப் பாதுகாப்பது, புதிதாக ஆதரவாளர்களையும் புரவலர்களையும் உருவாக்குவது ஆகியவற்றை அந்தப் பெண்கள் படையினர் செய்து தருகின்றனர்.