பாரதியின் ஞானப்பாடல் – 19

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்ற வகையிலான ஞானப்பாடல் இது...

சிவகளிப் பேரலை – 39

சிவபெருமான் ஆட்சி நடைபெறுகின்ற மனத்திலே நான்கு பாதங்களுடைய அறம் நன்கு பேணப்படுகிறது. தவம், தூய்மை, கருணை, உண்மை ஆகியவையே தர்ம தேவதையின் (அறத்தின்) நான்கு கால்களாக வர்ணிக்கப்படுகின்றன.  இவ்வாறு அறம் பேணப்படுவதால்,  காமம், கோபம் (குரோதம்), செருக்கு (கர்வம்) ஆகியவை அழிந்துவிடுகின்றன. பாவமும் ஒழிந்துவிடுகிறது. காலம், இன்பத்தை மட்டுமே தருகிறது. மேலும், இறையனுபூதியாகிய ஞானப்பயிர் விளைந்து நற்பலன்களைக் கொடுக்கிறது.....

பாரதியின் ஞானப்பாடல்- 18

கடமை கடமை என்று ஓடிக் கொண்டிருக்க வேண்டாம், கட்டற்று, கடமை நினைவே இன்றி வாழ்வோம் - என்ற மகாகவி பாரதியின் வித்யாசமான சிந்தனை இக்கவிதையில் ஒலிக்கிறது....

சிவகளிப் பேரலை – 38

முற்பிறவிகளில் செய்த தவமாகிய மலையால் காட்சி தருகின்ற இறைவன் சிவபெருமான். அழிவில்லா அமுதமாக விளங்குபவர். புன்னகை தவழ்கின்ற வதனம் உடையவர். மங்களத்தைத் தருகின்றவர், சந்திரனைச் சூடியவர். நற்குணங்களுக்கு உறைவிடமாக இருப்பவர்.....

எனது முற்றத்தில் – 8

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 25 வயது இளைஞர்  சென்னையிலிருந்து கொல்லம் சென்றார். மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது அவர் முன் இருந்த பணி. ஒருநாள் இடைவேளையில் கண்ணப்ப நாயனார் கதையை உணர்ச்சிபூர்வமாக இந்த இளைஞர் சொன்னார்; அந்த கேரளப் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிவபக்தி உள்ளவர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டதாக அந்த இளைஞர் திரும்பி வந்தபின் என்னிடம் சொன்னார். எனக்குப்  பொறி தட்டியது.  நூலகங்களில் என்னதான் புத்தகங்கள் நிரம்பி வழியட்டுமே, மரத்தடியில் பிள்ளைகளை அமர வைத்து மனதார கதை சொன்னால் அதன் குணமே தனி. தமிழ் இளைஞர், மலையாளப் பிள்ளைகளை எப்படி அந்தக் கதையின் உணர்ச்சி வளாகத்திற்குள் கொண்டுவந்தார்? மெத்தப் படித்தவர்கள் தொட்டது வைத்ததற்கு எல்லாம் லாங்வேஜ் பிராப்ளம் என்று புலம்புவார்களே, அதெல்லாம் எங்கே போயிற்று இந்தச் சம்பவத்தில்? 

பாரதியின் ஞானப்பாடல் – 17

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் எளியவர்களின் பக்தியும் மெச்சப்படுகிறது... இக்கவிதை அதற்குச் சான்று.

சிவகளிப் பேரலை – 37

பாற்கடலைக் கடந்தால் பல்வேறு பயன்களுக்காக பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. ஆனால், பக்தர்கள் வேதக்கடலைக் கடையும்போது இந்த அனைத்துப் பொருட்களின் பலன்களையும் உள்ளடக்கிய சிவபெருமானே காட்சி தந்து நம்மை ஆட்கொள்கிறார். ...

பாரதியின் ஞானப்பாடல் – 16

எளிய வரிகள்... அரிய அனுபவ ஞானப் பதிவுகள்... மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 16வது கவிதை இது...

சிவகளிப் பேரலை – 36

இந்த உடலை வெறும் பஞ்சபூத சேர்க்கை என்று நினைக்கலாகாது.  இது, இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயம். “உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்று திருமந்திரம் உரைப்பதை நினைத்துப் பார்ப்போம். ஆகையால், பேரிறையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த உடலைப் புனிதமாக்க வேண்டிய கடமையை இங்கே வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....

சத்திய சோதனை 2(11-15)

னக்கு இருந்த கஷ்டங்கள் மேலும் ஆழமானவை. ‘ஏசுநாதர் ஒருவரே கடவுளின் அவதாரமான திருக்குமாரர். அவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் மாத்திரமே நித்தியமான வாழ்வை அடைய முடியும்’ என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுளுக்கு குமாரர்கள் இருக்க முடியும் என்றால், நாம் எல்லோரும் அவருடைய குமாரர்களே. ஏசுநாதர் கடவுளைப் போன்றவர் அல்லது அவரே கடவுள் என்றால், எல்லா மனிதரும் கடவுளைப் போன்றவர்களே என்பதுடன் ஒவ்வொருவருமே கடவுளாகவும் முடியும். ஏசுநாதர் தமது மரணத்தினாலும், தாம் சிந்திய ரத்தத்தினாலும் உலகத்தைப் பாவங்களிலிருந்து ரட்சித்தார் என்பதை அப்படியே ஒப்புக்கொண்டுவிட என் பகுத்தறிவு தயாராக இல்லை. இதை உருவகமான கூற்றாகக் கொண்டால் இதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதோடு, கிறிஸ்தவ தருமத்தின்படி மனிதருக்கு மாத்திரமே ஆன்மா உண்டேயன்றி மற்ற ஜீவன்களுக்கு ஆன்மா இல்லை. அவைகளுக்குச் சாவு என்பது அடியோடு மறைந்துவிடுவது தான். நானோ, இதற்கு மாறுபட்ட நம்பிக்கை கொண்டிருந்தேன். ஏசுநாதர் லட்சியத்துக்காக உயிரைக் கொடுத்தவர், தியாகமூர்த்தி, தெய்வீகமான போதகர் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதுவரையில் தோன்றியவர்களிலெல்லாம் அவரே பரிபூரணர் என்பதையும் நான் ஒப்புக்கொள்வதற்கில்லை. சிலுவையில் அவர் மாண்டது, உலகிற்குப் பெரியதோர் உதாரணம். ஆனால், ‘அதில் பெரிய ரகசியம் அல்லது அற்புதத் தன்மை இருக்கிறது’ என்பதை என் உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற சமயங்களை பக்தியுடன் பின்பற்றுகிறவர்கள் எனக்கு அளிக்கத் தவறியது எதையும் கிறிஸ்தவர்களின் பக்தி வாழ்க்கை எனக்கு அளித்து விடவில்லை. ....

பாரதியின் ஞானப்பாடல் – 15

பக்தியினால் இந்த உலகில் எய்தும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? சித்தம் தெளியும்; செய்கைகள் செம்மையாகும்; வித்தைகள் சேரும்; வீரர் உறவு வாய்க்கும்; நெஞ்சில் சஞ்சலம் நீங்கும்... தொடர்ந்து பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி... படியுங்கள்... பக்தியில் திளையுங்கள்!

இலக்கிய தீபம் – 12

தமிழர் சரிதத்தின் ஆராய்ச்சி வரலாற்றில் எனது நண்பர் இராவ்ஸாஹெப் மு. இராகவையங்காரவர்களது 'சேரன் செங்குட்டுவன்' தலைமையான ஓர் இடம் பெற்றிருக்கிறது. இந்நூலால் ஆராய்ச்சியுலகில் ஒரு கிளர்ச்சி எழலாயிற்று. சேரரது பண்டைத் தலைநகர் யாது? அவர்களது தாயக்கிரமம் யாது? அவர்கள் ஒரே குடும்பத்தினரா? பல பிரிவினரா? அவர்களது வெற்றி வரலாறு யாது? கடைச்சங்க காலம் யாது? சிலப்பதிகார காலம் யாது? என்பன முதலியன அறிஞர்கள் தெளிதற்குரிய விஷயங்களா யமைந்தன. இந்நூல் 1915-ல் வெளிவந்தது. எனவே, இப்போது முப்பத்தைந்து ஆண்டுகட்கு மேல் ஆகிவிட்டன. பல அறிஞர்களும் மேற்கூறியவற்றுள் ஒவ்வொன்றனை யெடுத்து ஆராய்ந்துள்ளனர். ஆனால், ஒரு சில தவிர ஏனைய இன்னும் புதிர்களாகவே உள்ளன. இப்புதிர்களுள் ஒன்று 'மௌரியர் தென் இந்தியப் படையெடுப்பு'. மீண்டும் இதனைக் குறித்து ஆராய வேண்டும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.....

சிவகளிப் பேரலை – 35

திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான், “வேண்டத்  தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ, வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி, என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன்று உண்டென்னி லதுவும் உந்தன் விருப்பன்றே” என்று மொழிகிறார்....

யுக சந்தி

எரிந்து தகிக்கும் அவ்வெம்மையின் நடுவே சுகம் தரப் படர்ந்த அந்த நிழல் போலும், யந்திரங்களைத் தவிர எதையுமே நம்பாத இவ்விருபதாம் நூற்றாண்டில் - சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தன் சொந்தக் கால்களையே நம்பி நிற்கும்- காண்பதற்கரிதான அந்தக் கிழவியின் பிரசன்னம் போன்றும் மெல்லென வீசிய குளிர்காற்றில் வேப்பங் குழைகள் சிலிர்த்தன....

பாரதியின் ஞானப்பாடல்- 14

மகாகவி பாரதியின் ஞானப் பாடல்களில் 14வது கவிதை இது...தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது       தோற்ற முறுஞ் சுடராம்!