-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்
18. கடமை
கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறிவோம் தொழிலறியோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை, சிறுமை, துன்பம், பொய்,
வருத்தம், நோவு, மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
$$$