மனித யந்திரம்

அன்றாட வயிற்றுப்பாட்டுக்காக உழைத்து ஓடாய்த் தேய்பவனும்கூட தன்னிலை மாறுவதில்லை என்ற அரிய உண்மையை வெளிப்படுத்தும் சிறுகதை (1937) இது. இதன் நாயகன் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு பொய்க்கணக்கு எழுதும் வாய்ப்பு இருந்தும் அதனைச் செய்வதில்லை; ஒரே இடத்தில் 45 ஆண்டுகள் வேலை பார்ப்பதே மனித யந்திரமான அவருக்கு கௌரவம். அவருக்கும் சிறு சபலம் வருகிறது. ஆனால், அச்சம் அந்த சபலத்தை வென்று விடுகிறது. ஏழைக்கு தவறு செய்யும் வாய்ப்பு கூட கிடையாது என்கிறாரோ புதுமைப்பித்தன்? நேர்மையாக இருப்பவன் யாரைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை என்பது தான் இந்த சிறுகதையின் நீதியா? அக்காலத்திய வெளிப்புறச் சித்திரங்கள், நாணய விகிதங்கள், நெல்லைத் தமிழ் ஆகியவற்றையும் இக்கதையில் தரிசிக்கலாம்...

பாரதியின் ஞானப்பாடல்- 9

இக்கவிதையும் மாயையைப் பழிக்கும் வீரக் கவிதை!

சிவகளிப் பேரலை – 29

சிவபெருமானின் பாதங்களைப் போற்றுகிறேன், அவரையே மனத்தில் நினைத்து தியானிக்கிறேன், அவரது திருவடியே கதியென்று சரணடைந்துவிட்டேன், அவரிடமே பிறவித் தளையில் இருந்து விடுதலையை வேண்டுகிறேன். அதற்கு வழிசெய்யும் வகையில், விண்ணில் உள்ள தேவர்கள் எல்லோரும் வியந்து போற்றுகின்ற தமது விழியருளை சிவபெருமான் என் மீது பாய்ச்சட்டும். அதன்மூலம் பேரின்பம் எனக்குள்ளே ஏற்படுமாறு செய்யட்டும்....