ஆசாரத் திருத்த மஹாசபை

மேற்படி ஆசாரத் திருத்த சபைகளிலே அறிவுடைய மனிதர் பலர், ஜனத்தலைவர்களும், உத்தியோக பதவிகளில் உயர்ந்தோரும், பிரபுக்களும், கீர்த்தி பெற்ற பண்டிதர்களும், சாஸ்திரிகளும், நீதி நிபுணர்களும் கூடி அறிவுடன் வாதங்கள் நடத்தி, அறிவுடன் சில தீர்மானங்கள் செய்து முடிக்கிறார்கள். அப்பால், அத் தீர்மானங்கள் தமது சொந்த ஒழுக்கத்திலும் தேச ஜனங்களின் நடையிலும் செய்கைகளாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் ஒன்றுமே நடப்பதில்லை. எனவே, மனித அறிவை இவர்கள் களைந்து போடும் குப்பைக்கு நிகராகவே மதிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. மேலும், அந்தத் தீர்மானங்கள் நிறைவேறுவதினின்றும் தேசத்து ஜனங்களுக்கு நன்மை விளையும் என்ற உண்மையான நம்பிக்கையுடனேயே அவை பிரேரேபணை செய்யப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏராளமான கால விரயமும் பொருட் செலவும் ஏற்படுகின்றன. இவ்வளவுக்கும் முடிவாக யாதொரு பயனும் விளையக்காணோமென்றால், இந்த ஆசாரத் திருத்தக்காரரின் சக்தியைக் குறித்து நாம் என்ன சொல்லலாம். இவ்வருஷமேனும், இவ்விஷயத்தில் தகுந்த சீர்திருத்தம் ஏற்படுமென்று நம்புகிறேன்....

சிவகளிப் பேரலை- 20

“மனம் ஒரு குரங்கு” என்பது உண்மைதான். காட்டுக்குள்ளே குரங்கு தாவிக் குதிப்பதைப்போல, மதி மயக்கத்தை ஏற்படுத்தும் மோகமாகிய வனத்துக்குள்ளே மனம் அங்குமிங்கும் ஓடுகிறது. மலைகளில் குரங்கு கூத்தாடுவதைப்போல, இந்த மனமும் பெண்களின் களியாட்டமாகிய மலைகளை நாடுகிறது. மரங்களில் உள்ள கிளைகள் மீது குரங்கு மாறி மாறிக் குதித்துக் கும்மாளமிடுவதைப்போல், இந்த மனக் குரங்கும் பல்வேறு ஆசைகளாகிய கிளைகளில் மாறி மாறி ஏறி நின்று குதிக்கிறது.