உலகம் பிறந்தது எனக்காக!

-கவியரசு கண்ணதாசன்

உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் இப்படத்தின் நாயகன்; சிறுவயதில் அறியாமல் செய்த தவறால் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டவன்; விடுதலையாகி, ஆதரவற்றவனாக  வெளிவரும்போது, சிறைப்பட்ட பறவையின் விடுதலை உணர்வுடன் அவன் பாடும் பாடல் இது. பாசத்துக்கு ஏங்கும் தவிப்பையும், உலகை ரசிக்கத் தயாராகும் துடிப்பையும், ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்ற முதல் வரியிலேயே சொல்கிறான். திரைப்படத்துக்கேற்ற காவிய வரிகளை வார்த்திருக்கிறார் கவியரசர்...

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக! (2)
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக! 

காற்றில் மிதக்கும் ஒலிகளிலே,
கடலில் தவழும் அலைகளிலே,
இறைவன் இருப்பதை நான் அறிவேன்!
என்னை அவனே தான் அறிவான்! (2)

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக! 

தவழும் நிலவாம் தங்கரதம்,
தாரகை பதித்த மணிமகுடம்,
குயில்கள் பாடும் கலைக்கூடம்,
கொண்டது எனது அரசாங்கம்! (2)

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக! 

எல்லாம் எனக்குள் இருந்தாலும்,
என்னை தனக்குள் வைத்திருக்கும்,
அன்னை மனமே என் கோயில்!
அவளே என்றும் என் தெய்வம்! (2)

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!  (2)
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!

உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக !

திரைப்படம்: பாசம் (1962)
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடகர்: டி.எம்.எஸ்.சௌந்தர்ராஜன்
நடிப்பு: எம்.ஜி.ராமசந்திரன்

$$$

பாடலின் திரைவடிவம் இதோ…

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s