மானுட உணர்வுகளின் ஆதி ஆழத்தை அறிபவர் யாரும் இருக்க முடியாது. புனைவிலக்கியம் அந்த வெற்றிடத்தை நோக்கிய பாய்ச்சல். ஜெயகாந்தன் அவர்கள் கூறுவது போல சஹ்ருதயர்களால் மட்டுமே பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு அவரே இச் சிறுக்கதையில் சொல்வது போல, கூடு விட்டு கூடு பாயும் திறன் வேண்டும். முத்தாயியின் கதை உங்களுக்குள்ளும் சிறு சலனத்தை ஏற்படுத்தினால், உங்களாலும் கூடு விட்டு கூடு பாய முடிகிறது என்று பொருள்.
Day: June 30, 2022
சிவகளிப் பேரலை – 46
முந்தைய ஸ்லோகத்தில் மனத்தை பறவையாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கே அதனை ஓர் அன்னப் பறவையாக உருவகப்படுத்துகிறார். அன்னப்பறவை அழகு பொருந்திய மாளிகைக்குள் வளர்க்கப்படும் பேறு பெற்றது. சிவபெருமானின் திருவடிகளே, மனமாகிய அன்னம் சுகித்திருக்கும் மாளிகை என்பதை அழகு மிளிர எடுத்துரைக்கிரார் ஆதிசங்கரர்....
பாரதியின் ஞானப்பாடல் – 25
கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்ஷ நிலையை அடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.....