பாரதியின் ஞானப்பாடல்- 9

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

9. சங்கு

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
      சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
      பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!       1

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
      இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
      தூய ராமென்றிங் கூதேடா சங்கம்!       2

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
      புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப் பாரவர்
      ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!       3

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
      மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
      சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்!       4

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s