பாரதியின் ஞானப்பாடல்- 24

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

24. தெளிவு

எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
      ஏழைமை யுண்டோ டா?-மனமே!
பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்தபின்
      புத்தி மயக்க முண்டோ ? 1

உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
      உள்ளங் குலைவதுண்டோ -மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
      வேதனை யுண் டோடா? 2

சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்
      செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே,
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
      எண்ணஞ் சிறிது முண்டோ ? 3

செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
      தேவனுரைத் தனனே;-மனமே!
பொய்கருதாம லதன்வழி நிற்பவர்
      பூதல மஞ்சு வரோ? 4

ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்
      கச்சமு முண்டோ டா?-மனமே!
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
      தேக்கித் திரிவ மடா! 5

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s