பாரதியின் ஞானப்பாடல் – 6

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

6. ஆத்ம ஜெயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
      கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம், அதுநம்
      வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்
      கிறுதியிற் சோர்வோமோ?-அட,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
      மேவு ப்ராசக்தியே! 1

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,
      எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
      சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
      முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
      தாழ்வுற்று நிற்போமோ? 2

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s