சைவ சமயத்தில் மொழிப்போர் -மதிப்புரை 

சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்தி பிள்ளை (1897 - 1971) அவர்கள், தனது காலத்தில் ஆரிய- திராவிடப் புரட்டுக்கு எதிராகவும் நாத்திக இயக்கங்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராகவும் களமாடிய சைவ சித்தாந்தப் பேரறிஞர். அவரது ஐம்பதாவது நினைவு ஆண்டில், நண்பர் நெல்லை சொக்கலிங்கம், அவரது படைப்புகளைத் திரட்டித் தொகுத்து அற்புத நூலாக்கி இருக்கிறார். அந்த நூல் குறித்த, எழுத்தாளர் திருநின்றவூர் ரவிகுமாரின் மதிப்புரை இது.

உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 2)

திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அவரது பேச்சே எழுத்துநடை போல சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல். சென்னையில் 1941–இல் நிகழ்ந்த சான்றோர் ஒருவரின் மணிவிழாவில் திரு.வி.க. நிகழ்த்திய உரை இது என்று சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுவே உண்மை. அந்த அளவுக்கு அன்றைய சான்றோர் உரைக்கும் திறனையும் மக்கள் கேள்வித் திறனையும் பெற்றிலங்கினர். பட்டிமன்றம் என்ற பெயரில் இப்போது கூத்தடிக்கும் நமது இன்றைய கையறு நிலையை ஒப்பிட்டுக் கொள்ளவும். திரு.வி.க.வின் அந்த உரையே பின்னாளில் ‘உள்ளொளி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டு நூலானது. இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. இதனை அரசி புக் டிப்போ, மயிலாப்பூர், சென்னை வெளியிட்டுள்ளது. சுமார் 200 பக்கங்கள் கொண்ட இந்நூலின் அன்றைய விலை: ரூ. 4.50. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது இரண்டாவது பகுதி...