உலகெலாம் பதிப்பகத்தின் மையத் தளமாக ‘பொருள் புதிது’ என்ற இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. தமிழில் நல்ல நூல்களை வெளியிட வேண்டும் என்ற இலக்குடன் திருப்பூரில் துவங்கப்பட்டுள்ள இப்பதிப்பகத்தின் தகவல்கள், செய்திகள், நூலாக வெளியாக உள்ள கட்டுரைகள், கவிதைகள், தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் விவரங்கள் உள்ளிட்டவை இத்தளத்தில் வெளியாகும்... ’சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்ற மகாகவி பாரதியின் ஆணையே எம்மை வழிநடத்தும் பெருமுழக்கம்.