உள்ளொளி – திரு.வி.க. (பகுதி- 3)

திரு.வி.க.வின் உரைநடை கருத்துச் செறிவானது. நாகரிகமான தர்க்கங்களுடன், இனிய சொற்களுடன், தெளிவான ஆற்றோட்ட நடையில் அவர் எழுதியிருப்பவை அனைத்துமே தமிழின் செல்வங்கள். அவரது பேச்சே எழுத்துநடை போல சிறப்பாக இருக்கும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணம், இங்குள்ள ‘உள்ளொளி’ நூல். சென்னையில் 1941–இல் நிகழ்ந்த சான்றோர் ஒருவரின் மணிவிழாவில் திரு.வி.க. நிகழ்த்திய உரை இது என்று சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுவே உண்மை. திரு.வி.க.வின் அந்த உரையே பின்னாளில் ‘உள்ளொளி’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டு நூலானது. இங்கு நாம் வெளியிட்டிருப்பது, அந்த நூலின் ஆறாம் பதிப்பில் கிடைத்த பதிவு. வாசகரின் வாசிப்பு வசதியை முன்னிட்டு, இந்த நூல் 4 பகுதிகளாக வெளியாகிறது. இங்குள்ளது மூன்றாவது பகுதி...