பாஞ்சாலி சபதம் – 2.2.3

-மகாகவி பாரதி

சூதில்  தோற்று பணயமாக வைத்த பாஞ்சாலியை தருமன் இழந்து கையறுநிலையில் தவிக்க, அவனது கௌரவ இளையவனான துரியன் கூத்தாடுகிறான் - நெடுநாள் பகை தீர்ந்ததென்று! அப்போது அவையில் நிகழ்ந்த அநியாயங்களை எல்லாம் எனது பாடலில் எழுத என்னால் இயலாது என்கிறார் மகாகவி பாரதி.

இரண்டாம் பாகம்

2.2. துகிலுரிதற் சருக்கம்

2.2.3. துரியோதனன் சொல்வது

நின்று துரியோதனன் – அந்த மாமனை
      நெஞ்சொடு சேரக் கட்டி,
‘என்துயர் தீர்த்தாயடா – உயிர் மாமனே,
      ஏளனந் தீர்த்துவிட்டாய்.
அன்று நகைத்தாளடா; – உயிர் மாமனே,
      அவளைஎன் ஆளாக்கினாய்
என்றும் மறவேனடா, – உயிர் மாமனே,
      என்ன கைம்மாறு செய்வேன்! 45

‘ஆசை தணித்தாயடா, – உயிர் மாமனே,
      ஆவியைக் காத்தாயடா.
பூசை புரிவோமடா, – உயிர் மாமனே,
      பொங்க லுனக்கிடுவோம்.
நாச மடைந்ததடா – நெடுநாட்பகை,
      நாமினி வாழ்ந்தோமடா!
பேசவுந் தோன்றுதில்லை; – உயிர் மாமனே,
      பேரின்பங் கூட்டிவிட்டாய்.’ 46

என்று பலசொல்லுவான், – துரியோதனன்
      எண்ணி எண்ணிக் குதிப்பான்;
குன்று குதிப்பதுபோல் – துரியோதனன்
      கொட்டிக் குதித்தா டுவான்.
மன்று குழப்பமுற்றே, – அவர் யாவரும்
      வகைதொகை யொன்றுமின்றி
அன்று புரிந்ததெல்லாம் – என்றன் பாட்டிலே
      ஆக்கல் எளிதாகுமோ? 47

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s