இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்

-மகாகவி பாரதி

மகாகவி பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் ருதுவான நாளன்று பாடிய பாடல் இது என யதுகிரி அம்மாள் குறிப்பிடுகிறார்.

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்;

இனிமனக் கவலைக் கிடமில்லை!

.      

மந்திரங்களைச் சோதனை செய்தால்

வையகத்தினை ஆள்வது தெய்வம்;

இந்தத் தெய்வம் கதியென்றிருப்பீர்!

ஆக்க முண்டென் றனைத்து முரைக்கும்!

(இந்த)       1

மரத்தின் வேரில் அதற்குணவுண்டு;

வயிற்றினிலே கருவுக் குணவுண்டு;

தரத்திலொத்த தருமங்களுண்டு;

சக்தியொன்றிலோ முக்தியுண்டு!  

(இந்த)      2

உலகமே உடலாய் அதற்குள்ளே

உயிரதாகி விளங்கிடுந் தெய்வம்!

இலகும் வானொளி போலறிவாகி

எங்கணும் பரந்திடும் தெய்வம்!   

(இந்த)      3

செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை;

சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை;

உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்

உணர்வு கொண்டவர் தேவர்களாவர்!    

(இந்த)   4

நோயில்லை வறுமையில்லை;

நோன்பிழைப்பதிலே துன்பமில்லை;

தாயும் தந்தையும் தோழனுமாகித்

தகுதியும் பயனும் தரும்தெய்வம்! 

(இந்த )     5

அச்சமில்லை மயங்குவதில்லை;

அன்பும் இன்பமும் மேன்மையும் உண்டு;

மிச்சமில்லை பழந்துயர்க் குப்பை;

வெற்றியுண்டு விரைவினில் உண்டு!   

(இந்த)      6

இந்தத் தெய்வம் நமக்கநுகூலம்;

இனி மனக்கவலைக் கிடமில்லை!      

.

  • ஆதாரம்: பாரதி நினைவுகள் – பக்கம் 137-138

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s