பாரதி- அறுபத்தாறு (40-41)

-மகாகவி பாரதி

பாரதி- அறுபத்தாறு

யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ்


கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
      குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
      சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
      பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயும்
      கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.       40

தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
      சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;
      தோழரே! எந்நாளும் எனக்குப் பார்மேல்
மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
      வானவர்கோன், யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
      சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி.       41

$$$


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s