சாந்திக்கு மார்க்கம் – 3

உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.....

பக்திப் பாடல்கள் -15, 16

மகாகவி பாரதியின் பக்திப் பாடல்களில் சிறியவை என்றபோதும் மிகவும் பொருள் பொதிந்தவை இந்த 15, 16 கவிதைகள்....

கண்ணே கலைமானே!

கவியரசு கண்ணதாசனின் கடைசித் திரைப்பாடல் இது...

சிவசக்தி பாடல்கள்

மகாகவி பாரதியின் பக்தி பாடல்களில் சிவகக்தி மீதான பாடல்கள் (11-14) இவை...

சாந்திக்கு மார்க்கம் – 2

மனித ஆன்மாவின் அமர்க்களத்தில் அகத்தின் ஆள்கைக்காகவும், அரசுக்காகவும், ஆதிபத்திய கிரீடத்திற்காகவும் இரண்டு தலைவர் அமர் புரிகின்றனர். அவரில் ஒருவன் 'யான்' என்னும் தலைவன்; 'இவ்வுலக அரசன்' என்றும் சொல்லப்படுபவன்; மற்றொருவன் மெய்ப்பொருள் என்னும் தலைவன்; தந்தையாகிய கடவுள் என்றும் சொல்லப்படுவான். 'யான்' என்னும் தலைவன்; காமம், கர்வம், பேராசை, வீண் பெருமை, பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக்கொண்டு கலகம் விளைப்பவன். மெய்ப்பொருள் என்னும் தலைவன் இனிமை, பொறுமை, தியாகம், பணிவு, அன்பு என்னும் ஒளிக்கருவிகளைக் கொண்டு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்......

பக்திப் பாடல்கள்- 9,10

மகாகவி பாரதியின் கவிதைகளில், ‘பக்திப் பாடல்கள்’ தொகுப்பில் உள்ள 9, 10 ஆம் கவிதைகள் இவை....

எனக்கு நிலா வேண்டும்- நூல் மதிப்புரை

குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்ட புதினம் எழுதுவது புதிய விஷயமல்ல. ஆனால் அந்தத் துறையில் மூழ்கி முத்தெடுப்பது என்பது ஒரு கலை. இதை மிக அற்புதமாகச் சாதித்திருக்கிறார் ஹிந்தி எழுத்தாளர் சுரேந்திர வர்மா.

வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், தான் சார்ந்த நாடகத் துறையின் பலம்- பலவீனங்கள், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் ஒன்றாகக் கலக்கி, தெளிவான நீரோடை போன்ற கதையுடன் அவர் 1993-இல் படைத்த  ‘முஜே சாந்த் சாஹியே’ புதினம், ஹிந்தி எழுத்துலகில் பெரும் பரபரப்பை உருவாக்கியதுடன் முன்னுதாரணமான புதினமாகவும் மாறியது. 1996-இல் இதற்கு சாஹித்ய அகாதெமி விருது கிடைத்தது.

இப்புதினத்தை தடையற்ற தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எம்.சுசீலா.

முத்ரா ராட்சஸஸும், மேகதூதமும், சாகுந்தலமும் இந்தியக் கலையுலகின் அடிப்படை என்பதை இப்புதினத்தில் உணர்கிறோம். இதேபோல, தமிழின் காப்பிய வர்ணனைகளுடன் இயல்பான ஒரு தமிழ்ப் புதினம் உருவாக முடியுமா என்ற ஏக்கம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

வள்ளி மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் தொகுப்பில், 7, 8 கவிதைகள் வள்ளி மீதானவை. அவை இங்கே...

இன்றைய இந்தியாவின் முகங்கள்- 3

இந்திய விமானப் படையின் தென்மேற்கு பிராந்தியத் தலைவராக இருந்து (2018 ல்) ஏர் மார்ஷல் ரவீந்திரகுமார் தீர் ஓய்வு பெற்ற அடுத்த நாளே, குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இவரை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தார். டிபன்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் தொழிலுக்கான ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டார். இன்று குஜராத்தில் தனியார் துறையில் பாதுகாப்பு சார்ந்த தொழிற்சாலைகள் பல துவங்கப்பட்டுள்ளன.

சாந்திக்கு மார்க்கம்- 1

ஜேம்ஸ் ஆலன் எழுதிய  ‘From Poverty to Power’ என்ற நூலின் இரண்டாம் பகுதி  ‘The way to peace’ ஆகும். அதனை வ.உ.சி.  ‘சாந்திக்கு மார்க்கம்’ என்று மொழிபெயர்த்தார்.

“சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கேற்ப, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இந்த நூலை தமிழ்கூறு நல்லுலகம் அறிவதற்காக மொழிபெயர்த்திருக்கிறார் வ.உ.சி. இந்நூல் பல பகுதிகளாக இங்கே பதிவாகிறது…

எனது முற்றத்தில்…. 1

திரு. எஸ்.எஸ்.மகாதேவன், தமிழ் இதழியல் உலகின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தியாகபூமி, இந்தியா டுடே, இந்தியன் எக்ஸ்பிரஸ், விஜயபாரதம் பத்திரிகைகளில் பணியாற்றியவர்; நமது இணையதளத்தின் வழிகாட்டி. அவரது வாழ்வனுபவங்கள் இத்தளத்தில் தொடராக வெளிவருகின்றன…

முருகன் மீதான பாடல்கள்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பக்திப் பாடல்கள் என்ற தொகுப்பில், 2 முதல் 6 வரையிலான கவிதைகள் முருகன் புகழ் போற்றுபவை. அவை இங்கே...

சத்திய சோதனை 1(1- 5)

உலகப் புகழ் பெற்ற சுய சரிதைகளில் மகாத்மா காந்தியின் (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி) ‘சத்திய சோதனை’க்கு பிரதான இடமுண்டு. சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது அவர் எழுதிய சுய வாழ்க்கை வரலாற்று நூ‌ல். ‘என்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல’ எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தியடிகள், தன் வாழ்க்கையை ’ஒரு திறந்த புத்தகம்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு நினைவுபடுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார். அவை யாவும் சத்தியத்திற்கு ஏற்பட்ட சோதனைகள் என்பது அவரது எண்ணம். அதனால் இந்நூ‌லுக்கு ’சத்தியசோதனை’ என்று அவர் பெயர் சூட்டினார். தம் பிறப்பு முதல் 1921 ஆம் ஆண்டு வரையிலான சுய சரிதையை காந்தியடிகள் எழுதியுள்ளார். இது, குஜராத்தி மொழியில் வெளிவந்த ‘நவஜீவன்’ வாரப் பத்திரிகையில் 1925 முதல் 1929 வரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் காந்தியடிகளின் தனிச் செயலர் மகாதேவ தேசாய். தமிழில் ரா.வேங்கடராஜுலு மொழிபெயர்த்துள்ளார்.