சென்னையில் ஏப்ரல் 26ஆம் தேதி மாலை நடைபெற்ற விஜயபாரதம் பிரசுரம் ஆண்டுவிழாவில், மூத்த எழுத்தாளர் சோ.தர்மன் உள்பட எழுத்தாளர்கள் நால்வருக்கு விருது வழங்கப்பட்டது.
Category: செய்தி
உவேசா விருது பெறும் வாழ்நாள் சாதனையாளர் திரு. சோ.தர்மன்: வாழ்க்கைக் குறிப்பு
விஜயபாரதம் பிரசுரம் 2024ஆம் ஆண்டுமுதல், சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. தமிழ் எழுத்துத் துறையில் சாதனையாளராக இயங்கி வருபவர்களுக்கு அமரர் உ.வே.சாமிநாத ஐயர் பெயரிலான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இது…
பாரதி விருது பெறும் சிறந்த எழுத்தாளர் Dr. ஜெயஸ்ரீ சாரநாதன்: வாழ்க்கைக் குறிப்பு
தஞ்சையைப் பூர்விகமாகக் கொண்டு, ஒசூரில் வளர்ந்து, தற்போது சென்னையில் வாழும் முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன் அவர்கள், விஜயபாரதம் பிரசுரத்தின் இந்த ஆண்டுக்கான பாரதி விருது பெறும் எழுத்தாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர், ஜோதிட ஆராய்ச்சியாளர், பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர் இவர்.
பாரதி விருது பெறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் திரு. ஜனனி ரமேஷ்: வாழ்க்கைக் குறிப்பு
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இயங்கி வரும் சென்னையைச் சார்ந்த எழுத்தாளர் திரு. ஜனனி ரமேஷ் அவர்கள் இந்த ஆண்டு, விஜயபாரதம் பிரசுரம் வழங்கும், மொழிபெயர்ப்புக்கான பாரதி விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பாரதி விருது பெறும் சிறந்த பதிப்பாளர் ரேர் பப்ளிகேஷன்ஸ் – திரு. எஸ்.ரங்கநாதன்: வாழ்க்கைக் குறிப்பு
விஜயபாரதம் பிரசுரம் வழங்கும் சிறந்த பதிப்பாளருக்கான பாரதி விருது இந்த ஆண்டு ரேர் பதிப்பகத்திற்கு வழங்கப்படுகிறது. அதுகுறித்த சிறுகுறிப்பு…
விஜயபாரதம் பிரசுரம் ஆண்டு விழா: திரு. சோ.தர்மன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்!
விஜயபாரதம் பிரசுரத்தின் மூன்றாம் ஆண்டுவிழா, சென்னையில் 26.04.2026, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இவ்விழாவில் சாஹித்ய அகாதெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளர் திரு. சோ.தர்மன் அவர்கள் உவேசா வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார்.
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு வழக்குக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு (ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.
Withdraw the Bharatiya Jnanpith Award announced for Vairamuthu!
‘Padaipaalargal Sangamam’ has put forward this appeal against the announcement regarding the 2025 Jnanpith Award. The letter, which is to be sent to the President of the Bharatiya Jnanpith, is published here…
வைரமுத்துக்கு அறிவித்த ஞானபீடம் விருதைத் திரும்பப் பெறுக!
ஞானபீட விருது- 2025 அறிவிப்புக்கு எதிராக தார்மிக அடிப்படையில் ‘படைப்பாளர்கள் சங்கமம்’ அமைப்பு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. பாரதீய ஞானபீடம் தலைவருக்கு அனுப்பவுள்ள கடிதம் இங்கு வெளியிடப்படுகிறது…
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு திருப்பங்கள்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மீறிய தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செவ்வாய், புதன் கிழமைகளில் இரு திருப்பங்களைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், புதன்கிழமை இவ்வழக்கு தனிநீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை தொடர்ந்து விசாரித்ததுட்டன் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18க்கு ஒத்திவைப்பு
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்; உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது" என்று திருப்பரங்குன்றம் வழக்கில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை மற்றும் ஆண்டாள் பேரவை சார்பில் கிரிவலம், மாசி மகம்- பௌர்ணமியை ஒட்டி (மார்ச் 2ஆம் தேதி) மேற்கொள்ளப்பட்டது. ...
ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு; அமைச்சர் ரகுபதிக்கு நீதிபதி கண்டிப்பு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மதுரை ஆட்சியர், மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் வீம்பான கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதியை நீதிபதி கண்டித்தார். வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில ஊடகச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இரு நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை அமர்வு) தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு: மன்னிப்பு கோரியது தமிழக அரசு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் ஏளனம் பேசிய தமிழக அரசு, தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது (பிப். 2), நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இதுதொடர்பான சில பத்திரிகை செய்திகள் இங்கே…