மதம் மாறிய பிறகு இந்து பட்டியலின சலுகையையும், அந்தஸ்தையும் இழக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான இரு செய்திகள் இங்கே…
Tag: நீதித் துறை
மதம் மாறியவர்களுக்கு எஸ்.சி. சலுகையா? உச்ச நீதிமன்ற வழக்குகள் சில…
‘சூடான ஐஸ்கிரீம்’ சுவைத்திருத்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், தீண்டாமையைக் காரணம் காட்டி, இந்து மதத்தை வெறுத்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, சலுகைகளைப் பெறும் தந்திரசாலிகளைப் பார்க்கும் போது, சூடான ஐஸ்கிரீம் தான் நினைவுக்கு வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கண்டித்து வருவது ஒன்று தான் இப்போதைக்கு ஆறுதல். இது தொடர்பான 3 வெவ்வேறு வழக்குகள் தொடர்பான செய்தி ஆவணங்கள் இங்கே…
மதம் மாறியவர் ஜாதி சான்றிதழ் கோர முடியாது: முக்கியமான தீர்ப்பு
‘சூடான ஐஸ்கிரீம்’ பார்த்திருக்கிறீர்களா? வாய்ப்பில்லை. ஆனால், இந்து மதத்திலிருந்து பிற மதத்திற்கு மாறிய பின்னரும் எஸ்.சி., எஸ்.டி, எம்.பி.சி, பி.சி. போன்ற ஜாதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு வழிவகுக்கும் நமது செக்யூலர் அரசுகளின் கிறுக்குத்தனமான ஆணைகள், சூடான ஐஸ்கிரீமைத் தான் நினைவு படுத்துகின்றன. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை அமர்வு) அளித்துள்ள தீர்ப்பு (26.06.2026) காலத்தே கிடைத்த சட்ட வழிகாட்டுதல் எனில் மிகையில்லை. அது தொடர்பான இரு செய்தி ஆவணங்கள் இங்கே...
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கோயில் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்: அரசின் நிலைப்பாடு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த (புதிய) மாநில அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
திருப்பரங்குன்றம்: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றி வழிபாடு நடத்த இந்துக்களுக்கு அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனுவை உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தள்ளுபடி செய்த நிலையில், இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி விசாரிக்க தடை
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் அவமதிப்பு வழக்குக்களை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற அமர்வு (ஏப். 8) உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீபம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரு திருப்பங்கள்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மீறிய தமிழக அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு செவ்வாய், புதன் கிழமைகளில் இரு திருப்பங்களைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. ஆனால், புதன்கிழமை இவ்வழக்கு தனிநீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, முழு அவமதிப்பு நடவடிக்கைக்கும் 2 நீதிபதிகள் அமர்வு தடை விதிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, வழக்கை தொடர்ந்து விசாரித்ததுட்டன் ஏப்ரல் 9ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
திருப்பரங்குன்றம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மார்ச் 18க்கு ஒத்திவைப்பு
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்; உயர் பதவிகளை வகிப்பதால் மட்டுமே யாரும் விதிவிலக்கு கோர முடியாது" என்று திருப்பரங்குன்றம் வழக்கில் நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்வழக்கை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் மீண்டும் மன்னிப்பு; அமைச்சர் ரகுபதிக்கு நீதிபதி கண்டிப்பு
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இறுதிக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 2ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மதுரை ஆட்சியர், மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றாததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இந்த விவகாரத்தில் வீம்பான கருத்துகளைத் தெரிவித்த அமைச்சர் ரகுபதியை நீதிபதி கண்டித்தார். வழக்கு மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில ஊடகச் செய்திகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன…
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இரு நாட்களில் மட்டும் தொழுகைக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அனுமதி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் (மதுரை அமர்வு) தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
நீதிபதிக்கு எதிரான அவதூறு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…
நீதிபதிக்கு எதிரான அவதூறு; தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அறிவிலிகளின் அவதூறுகளை வன்மையாகக் கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பதை சில தினங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜன. 28, 2026இல் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி...
திருப்பரங்குன்றம் தீபம்: இந்து முன்னணியினர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி போராட்டம் நடத்தியதாக இந்து முன்னணியினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சநாதனம் குறித்து உதயநிதி பேசியதுதான் ‘வெறுப்புப் பேச்சு’!
‘சநாதன தர்மம் குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 2023-ஆம் ஆண்டு பேசிய பேச்சு ‘வெறுப்புப் பேச்சு’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2026 ஜனவரி 21ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது. மேலும், உதயநிதியின் பேச்சு வெறுப்புப் பேச்சு; இந்து மதத்தின் மீதான ஒரு தெளிவான தாக்குதல்; இதைப் பேசிய உதயநீதிமீது வழக்கு பதியாத காவல்துறை, இந்த விஷயத்தில், எதிர்வினையாற்றிய பா.ஜ.க. நிர்வாகி அமித் மாளவியா மீது வழக்கு தொடர்ந்திருப்பது முறையல்ல என்று தமிழக காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிமன்றம், அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்டது.