நீதிபதிக்கு எதிரான அவதூறு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

-ஆசிரியர் குழு

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதியை அவதூறு செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி அளித்திருக்கிறது. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு:

தமிழக டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் விளக்கம்!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக, அவதூறு கருத்துகளைப் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கடந்த கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார் (டிச. 1).

இதனால், ஆவேசமடைந்த இண்டி கூட்டணி, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மத ரீதியாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நோட்டீஸ் அளித்தது. அது கிடப்பில் உள்ளது.

இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக, ஜாதி மற்றும் மத ரீதியில் அவதூறு கருத்துகள் தமிழகத்தில் திமுக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டன. அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக டிஜிபி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சைபர் குற்றப் பிரிவு , சமூக ஊடகங்களில் உள்ள ஆட்சேபனை கருத்துகள், பதிவுகளை தேடி சரிபார்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவதூறு பரப்பும் வகையிலான புத்தகங்களோ, சுவரொட்டிகளோ, அறிக்கைகளோ வெளியிடக் கூடாது என்றும், அதை உறுதி செய்யுமாறு மாவட்ட எஸ்.பி-க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • ஆதாரம்: ஜனம் டி.வி.

$$$

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு விவகாரம்:

உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்

புதுதில்லி: நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளார்.

மதுரை திருபரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்​று​மாறு தீர்ப்​பளித்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ராக அவதூறு கருத்​துகளைத் தெரி​வித்​தவர்​கள் மீது நடவடிக்கை கோரி, பாஜக வழக்​கறிஞர் ஜி.எஸ்.மணி தாக்​கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு தமிழக அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் கடந்த ஜன. 29-ஆம் தேதி உத்​தர​விட்​டிருந்தது.

இது தொடர்​பாக சட்​டம்​-ஒழுங்கு டிஜிபி (பொறுப்​பு) வெங்​கட்​ராமன் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள நிலை அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் குறித்து அவதூறாகப் பேசிய திமுக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகளைச் சேர்ந்​தவர்கள், திட்​ட​மிட்டு அவதூறு கருத்​துகளைப் பரப்​பிய​வர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்ய, சென்னை காவல் துறை சார்​பில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

சைபர் கிரைம் போலீ​ஸாரிடம் இந்த விவ​காரம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ஜி.எஸ்​.மணி குறிப்​பிட்​டுள்ள யூ-டியூப் சேனல்​கள் மற்​றும் சமூக வலை​தளங்களை இயக்​கும் நபர்​களைக் கண்​டறிய​வும், அவதூறு கருத்​துகளை நீக்​க​வும் சம்​பந்​தப்​பட்​ட​வர்​களுக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

புத்தகங்கள் பறிமுதல்: நீதிபதியை அவதூறாக சித்​திரிக்​கும் கார்ட்​டூனை அட்டைப் படமாக கொண்ட புத்​தகங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. இந்த விவகாரத்தை சைபர் கிரைம் போலீ​ஸார் தொடர்ந்து கண்​காணித்து வரு​கின்​றனர்.

மேலும், இது தொடர்​பாக உயர் நீதி​மன்ற மதுரை கிளை​யில் முற்​றுகைப் போராட்டம் நடத்தத் திட்​ட​மிட்​டிருந்த ஐக்​கிய முஸ்​லிம் முன்​னேற்​றக் கழகத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்​யப்​பட்​டு, ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டுள்​ளனர். இதே​போல, குரு​சாமி தலை​மையி​லான சமூக நல்​லிணக்​கத்​துக்​கான மக்கள் கூட்​டமைப்​பைச் சேர்ந்த 37 பேர் கைது செய்​யப்​பட்​டு, ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டனர்.

பொது அமை​தியை நிலை​நாட்​ட​வும், சமூக நல்​லிணக்​கத்தை உறுதி செய்து நீதித் துறை​யின் சுதந்​திரம், கண்​ணி​யத்​தைப் பாது​காக்​க​வும்​ நீதி​மன்​றங்​களின்​ உத்​தர​ப்படி சட்​டப்​படி நடவடிக்​கை எடுக்​கப்​பட்​டு உள்​ளது.

-இவ்​​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

  • நன்றி: இந்து தமிழ் திசை (02.02.2026)

$$$

Leave a comment