பேராசிரியர் ஸ்ரீ முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்; ராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், வைணவ பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே...
Month: November 2022
பாஞ்சாலி சபதம் – 1.1.17
பாண்டவரை சூதுக்கழைக்கச் செல்லும் அமைச்சர் விதுரன், போகும் வழியில் பாண்டவர் நாட்டின் வளமையைக் கண்டு வியக்கிறார். இத்துணை சிறப்பு மிக்க நாட்டிற்கு தீது இழைக்கதானும் ஒரு கருவியாகி விட்டேனே என்று மனம் வருந்துகிறார் இப்பாடலில்...
விவேகானந்தரும் அரவிந்தரும் அருளிய மறுமலர்ச்சி
திருமதி பிரேமா நந்தகுமார் (83), நாடறிந்த பேச்சாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். நமது தலத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இரண்டாவது கட்டுரை இது….
பாஞ்சாலி சபதம் – 1.1.16
பாண்டவர்கள் - கௌரவர்களின் பொதுவான உறவு என்று சொன்னால் அவர் சித்தப்பா விதுரன் தான். அவர் அஸ்தினாபுர அரசின் அமைச்சரும் கூட. அவரையே பாண்டவரை அஸ்தினாபுரம் அழைத்து வருமாறு தூது விடுகிறார் மன்னர்; பாண்டவர்களிடம், துரியனின் தீய உள்நோக்கத்தைப் புலப்படுத்துமாறும் கூறி அனுப்புகிறார். அதன்பின் சோர்வடைந்து வீழ்கிறார். புத்திர பாசத்தால் மயங்கினாலும் நியாய உணர்வுடன் தவிக்கும் மன்னரை மகாகவி பாரதி தனது பாடலில் படம் பிடிக்கிறார்.
எனது முற்றத்தில்- 30
ஒரு சிறிய வட்டார விவசாயிகளின் ஹிந்து சமயச் சடங்கு இந்த அளவுக்கு பிரம்மாண்டமான திருவிழாவாக வடிவெடுத்து அபாரமான வணிக வாய்ப்புக்கு வகை செய்திருப்பதை பெங்களூர் எம்.பி.யும் பாஜகவின் அகில பாரத இளைஞர் அணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா சுட்டிக்காட்டி, “லோக்கல் டு குளோபல் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லி வரும் கருத்துக்கு நேரடி உதாரணம் இது” என்று தனது ட்விட்டர் பதிவில் பாராட்டினார்...
நவ இந்தியாவின் தீர்க்கதரிசி
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்; மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது இரண்டாவது கட்டுரை இங்கே….
பாஞ்சாலி சபதம் – 1.1.15
மகனின் நிர்பந்தம் காரணமாக சூதாட்டத்துக்கு ஒப்புக்கொண்ட மன்னர் திருதராஷ்டிரன், சூதாட்டம் நிகழ்வதற்கான அழகிய மண்டபத்தை நிர்மாணிக்குமாறு உத்தரவிடுகிறார். அதன்படி அழகிய சபா மண்டபம் நிர்மானிக்கப்படுகிறது. ‘பஞ்சவர் வேள்வியில் கண்டது போலே’ மண்டபம் நிர்மாணிக்குமாறு தொழில் விணைஞர்களிடம் மன்னர் கூறுகையில், அவரது மனமும் திரிபடையத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி....
மகாவித்துவான் சரித்திரம்- 2(6இ)
"உலகெலாம்" என்ற செய்யுளுக்கு அந்த உரையாசிரியர் எங்ஙனம் பொருள் செய்திருக்கிறாரென்பதை அறிவதற்கு அதனுரையைப் படிப்பித்து இவர் கேட்டார். அச்செய்யுளின் நயத்தை அவ்வுரை நன்கு புலப்படுத்தவில்லை. 'மலர் சிலம்படி' என்பதற்கு இலக்கணப் பிழையாக மலர் போன்ற சிலம்படியென்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதனை யறிந்து இவர் மனவருத்தமடைந்து, "மலர் சிலம்படி யென்றது வினைத்தொகை; அதற்கு மலர்ந்த சிலம்படி யென்பதுதான் பொருள். மலர்போன்ற சிலம்படியென்று பொருள் கொள்ள வேண்டுமானால், மலர்ச்சிலம்படி யென் றிருத்தல் வேண்டும். அப்படியிருத்தல் இங்கே பொருந்தாது" என்றார்; உலகெலாம் மலர் சிலம்படியென இயைக்க வேண்டுமென்றும் இப்பொருளுக்கு மேற்கோள் திருவாசகத்திலுள்ள, "தில்லை மூதூ ராடிய சேவடி, பல்லுயி ரெல்லாம் பயின்றன னாக" என்பதென்றும் எங்களுக்குச் சொன்னார்.
சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்
பாரதியியல் ஆய்வாளர், அரவிந்த இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களை உடையவர், பேராசிரியர் திருமதி பிரேமா நந்தகுமார் (83). ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். சுவாமி விவேகானந்தரை ஸ்ரீராமானுஜருடன் ஒப்பிடும் இவரது இனிய கட்டுரை இங்கே...
பாஞ்சாலி சபதம் – 1.1.14
அறிவுரை கேளாச் செவியனான தனது மைந்தனின் அடத்தைக் கண்டு வெறுத்துப்போன்ன மன்னர் திருதராஷ்டிரன், எதிர்காலத் தீமையை எண்ணி நானினாலும், வேறு வழியின்றி பாண்டவரை சூதுக்கு அழைக்க உடன்படுகிறார். இதனை விரித்துச் சொல்ல ஆர்வமின்றி, இரண்டே பாடல்களில் முடித்து விடுகிறார் மகாகவி பாரதி...
விவேகானந்தர் இன்றிருந்தால்…
திரு. இந்திரா பார்த்தசாரதி, பிரபல தமிழ் எழுத்தாளர்; ‘குருதிப்புனல், ராமானுஜர், ஔரங்கசீப், ஏசுவின் தோழர்கள்’ உள்ளிட்ட 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; சரஸ்வதி சம்மான் சாஹித்ய அகாதெமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றவர். சொந்த ஊர் கும்பகோணம். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே….
பாஞ்சாலி சபதம்- 1.1.13
தந்தையின் அறவுரை துரியனை மேலும் வெறிகொள்ளச் செய்கிறது. இளையவர் ஆற்றல் பெருகுவது பின்னாளில் தனது ஆட்சிக்கு இடையூறாகும் என்கிறான்; பாண்டவரின் மீது மதிப்புக் கொண்ட அமைச்சன் விதுரன் தனது தந்தையை தவறாக வழிநடத்துவதாக ஏசுகிறான்; எவ்வகையிலேனும் ஆட்சியை விரிவாக்குவதே மன்னவன் கடமை என்கிறான்; இறுதியில், தந்தை தனக்கு உடன்படாவிடில், தனது சிரமறுத்து அங்கேயே சாவேன் என்றும் மிரட்டுகிறான். இவை அனைத்தையும் இனிய பாடலாகத் தருகிறார் மகாகவி பாரதி....
துறவியர் மகிமை
அமரர் திரு. சாண்டில்யன் (1930- 1957), பிரபலமான தமிழ் எழுத்தாளர்; சரித்திரப் புதினங்கள் எழுதுவதில் புகழ் பெற்றவர். இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். பத்திரிகயாளர், விடுதலைப் போராட்ட வீரர், திரைப்பட வசனகர்த்தா எனப் பல பரிமாணங்களை உடையவர்; 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது சிறு கட்டுரை இங்கே...
பாஞ்சாலி சபதம் – 1.1.12
பாண்டவரை சூதுக்கு அழைக்கலாம் என்ற மகனின் சொற்கேட்டு திகைத்த திருதராஷ்டிரன், ‘இது சந்திரகுலத்தில் உதித்த உனக்கு உகந்ததல்ல’ என்கிறார். சதி செய்து வெல்லுதல் வீரமல்ல என்றும் அறிவுரை கூறுகிறார்- செவிடன் காதில் ஊதும் சங்கு போல.
சத்திய சோதனை – 5(16-20)
தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக நடந்துகொள்ளுவதன் மூலம் அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத் தோட்ட முதலாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று வைத்துக் கொண்டேன். தோட்டக்காரர்கள் சங்கத்தினரையும் சந்தித்தேன். விவசாயிகளின் குறைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட முதலாளிகளின் கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட முதலாளிகளில் சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்; மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.....