பாஞ்சாலி சபதம் – 1.1.1

-மகாகவி பாரதி

முதல் பாகம்

1.1. துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்

1.1.1. பிரம்ம ஸ்துதி

நொண்டிச் சிந்து


ஓ மெனப் பெரியோர் கள்- என்றும்
.ஓதுவ தாய் வினை மோதுவ தாய்,
தீமைகள் மாய்ப்பது வாய், – துயர்
.தேய்ப்பது வாய், நலம் வாய்ப்பது வாய்,
நாமமும் உருவும் அற்றே – மனம்
.நாடரி தாய்ப் புந்தி தேடரி தாய்,
ஆமெனும் பொருளனைத் தாய், – வெறும்
.அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்; 1

நின்றிடும பிரமம்என் பார்;- அந்த
.நிர்மலப் பொருளினை நினைத்திடு வேன்;
நன்றுசெய் தவம் யோகம்- சிவ
.ஞானமும் பக்தியும் நணுகிட வே
வென்றி கொள்சிவ சக்தி- எனை
.மேவுற வே, இருள் சாவுறவே,
இன்தமிழ் நூலிது தான்- புகழ்
.ஏய்ந்தினி தாயென்றும் இலகிட வே. 2

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s