பாரதியின் ஞானப்பாடல் – 13

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

13. நான்

(இரட்டைக் குறள் வெண் செந்துறை)

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
      மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
      காற்றும் புனலும் கடலுமே நான்.       1

விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
      வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
      வாரியிலுள்ள உயிரெலாம் நான்.       2

கம்பனிசைத்த கவியெலாம் நான்,
      காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
      எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.       3

இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
      இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
      பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.       4

மந்திரங் கோடி இயக்குவோன் நான்;
      இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்;
      சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.       5

அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்;
      அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
      காரண மாகிக் கதித்துளோன் நான்.       6

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
      ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
      அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!       7

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s