அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 6

‘யானைக்குத் தழையுணவைக் கொடுக்கிறோம். அது அதை உடனே உண்ணாமல் தன் கொம்பினிடையிலே வைத்துக் கொள்கிறது.  “அடடா, இதை இது உண்ண வேண்டுமென்றல்லவா கொடுத்தோம்? இது இங்கே துக் கொண்டு விட்டதே” என்று கவலைப் படலாமோ! யானை எப்படியும் அதை உண்டே விடும். யானை தன் கோட்டிடையே வைத்த கவளத்தைப் போன்றது, அதியமான் நமக்குத் தரப்போகும் பரிசில்; அது நம் கையிலே இருப்பது போன்றதுதான். அது கிடைக்காமற் போகாது. இதை அனுபவத்தில் நாம் நன்றாக உணர்ந்திருக்கிறோமே அப்படியிருந்தும் நீ ஐயுறலாமோ! ..’

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 5

“தமிழுக்கு எங்கே போனாலும் மதிப்பு உண்டு என்பது உண்மைதான். ஆனாலும் அப்படி மதிப்பிட்டு உபசரிப்பதிலும் தரம் இருக்கிறதே! புலவர்களின் தகுதியை அறிந்து அதற்கு ஏற்பப் பேணும் இயல்பு உயர்ந்தது என்று யாவரும் சொல்கிறார்கள். உபகாரிகளிலும் வேறுபாடு இருக்கிறது. பரிசில் தருவதனால் எல்லாப் புரவலர்களும் ஒரே மாதிரி இருப்பவர்கள் என்று கொள்ளக் கூடாது. அவர்களிடத்திலும் தகுதியினால் வேறுபாடு உண்டு; வரிசை உண்டு.”

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 4

சேரமான் நடத்தும் செங்கோலாட்சி நாடறிந்தது. புலவர் நாவறிந்தது. தரும தேவதை அவன் நாட்டில் தங்கி நாலுகாலாலும் நின்று நடைபோடுகிறது. அவனுடைய நாடு அறமம் வளரும் கோயில். அவ்வறம் யாதோர் இடையூறும் இன்றி இனிதே தங்கும்படி செங்கோல் செலுத்தும் பேராளன் சேரமான். அறம் துஞ்சும் செங்கோலை உடைய அவனுடைய நாட்டில் வாழும் குடிமக்களுக்குக் குறை ஏது? பசி இல்லை; பிணி இல்லை; பகையும் இல்லை.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 3

வெற்றி பெற்றுப் பகைவருடைய புறம் பெற்ற வேந்தனை எல்லோரும் பாராட்டினார்கள். கலைஞர்கள் பழுத்த மரத்தை நாடும் பறவைகளைப் போல வந்தார்கள். புலவர்கள் அழகான பாடல்களைப் பாடித் தந்தார்கள். அந்தப் பாடல்களைத் தன்னுடைய இனிய குரலால் பாடினாள் ஒரு விறலி. பகைவருடைய புறம் பெற்ற வலிமையையுடைய சேர வேந்தனது வீரத்தை இன்னிசையோடு விறலி பாடினாள். அப்படி மறம் பாடிய பாடினி, பாட்டு மகள், ஒரு பரிசு பெற்றாள். பெண்களுக்கு எதைக் கொடுத்தால் உள்ளம் மகிழும் என்பதை நன்கு அறிந்தவர்கள் மன்னர்கள். விறலியர் பாடினால் அவார்களுக்குச் சிறந்த பொன்னணிகளை வழங்குவது அக்கால வழக்கம். இந்த விறலியும் பொன்னிழையைப் பெற்றாள்.

பொது சிவில் சட்டம் தேவை என்றவர் அம்பேத்கர்

பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியது என்ன என்று இக்கட்டுரையில் விளக்குகிறார், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான ஹெச்.வி.ஹண்டே.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 ஆ

அந்த நெடியோன் பாண்டிய குலத்தில் வந்த பெரிய மன்னர்களில் ஒருவன். ஒருகுலத்தில் பல மன்னர்கள் பிறந்திருந்தாலும், யாரேனும் சிலருடைய பெயராலே அந்தக் குலத்தைக் குறிப்பது வழக்கம். அந்தப் பெயரை உடையவர்கள் மிக்க சிறப்பைப் பெற்றவர்கள் என்பதை அவர்கள் குலம் என்று சுட்டிச் சொல்லும் வழக்கத்தினால் உணரலாம். சூரிய வம்சத்தில் பலர் உதித்தாலும் ரகு என்ற மன்னன் சிறந்தவனாக இருந்தான். அதனால் ரகுகுலம் என்ற பெயர் இராமன் பிறந்த குலத்துக்கு ஏற்பட்டது....

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 2 அ

பாரத தேசத்தில் பழங்காலம் முதற் கொண்டே போர் நடந்து வந்ததுண்டு. ஆனால் அந்தப் போர்களில் சில வரையறை இருந்தன. இன்ன இடத்தில் இன்ன காலத்தில் இன்னமுறையில் போர் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தது. இராமாயணப் போரில் இராமன் வெறுங் கையுடன் நின்ற இராவணனைக் கொல்லாது,  ‘நாளை வா’ என்று கூறி அனுப்பியது அறச் செயல். இத்தகைய பல அறச் செயல்கள் போரிடையிலும் நிகழ்வதால் அது போரேயானாலும் அறப்போராக இருந்தது.

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- 1

கொன்றைக் கண்ணியர், கொன்றை மாலையர், இடபவாகனர், இடபத் துவசர், நீலகண்டர், மாதிருக்கும் பதியர், மதி முடிக் கடவுள் ஆக விளங்கும் சிவபெருமான் சடாதாரியாக இருக்கிறார்.சடாதாரி என்ற மாத்திரத்திலே தவமுனிவர் திருக்கோலந்தான் நம் நினைவுக்கு வருகிறது. மற்ற  கடவுளரின் கோலங்களில் இத்தனை தவச் சிறப்புடைய அடையாளங்களைக் காண முடியாது. திருநீறும், தோலாடையும், சடா பாரமும் ஆகியவை தவக் கோலத்தைச் சார்ந்தவை. ஆகவே சிவபிரானை அருந்தவர் என்று சொல்வது வழக்கம்.  ‘அருந்தவ முதல்வன்’ (கலி.100:7) என்று கலித்தொகை பேசுகிறது....

அறப் போர் (சங்க நூற் காட்சிகள்)- முகவுரை

பழந் தமிழ் இலக்கியத்தின் சிறந்த நூல்களின் ஒன்றான புறநானூறில் சில பாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு இனிய சொற்சித்த்ரத்தைத் தீட்டுகிறார் அமரர் கி.வா.ஜ. வாருங்கள் அந்த இனிய தமிழில் தோய்வோம்...

சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை

மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.

திருநாளைப்போவார் நாயனார் புராணம்

பெரிய புராணம் என்று அழைக்கப்படும் திருத்தொண்டர் புராணத்தை சேக்கிழார் பெருமான் இயற்றி அருளினார். ஈசன் அடியார் எப்பிறப்பாயினராயினும் இணையானவரே என்பதை இந்நூல் உறுதிபடக் கூறுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே சமூக சமத்துவம் நாடிய அருளாளரான சேக்கிழார் பெருமானின் இந்நூல், அனைவரும் படித்தேற வேண்டியதாகும். இதில் இடம்பெற்றுள்ள ‘திருநாளைப்போவார் நாயனார் புராணம்’ (நந்தனார் சரிதம்) தற்காலத்தின் தேவை கருதி இங்கே பதிவாகிறது...

இந்திய விமானப் படை: பெயர் மாற்றமும் களம் மாற்றமும்

இந்திய விமானப் படை (IAF - Indian Air Force) பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் இந்திய விமானம் மற்றும் வான்வெளிப் படை அல்லது இந்திய வான் மற்றும் விண்வெளிப் படை (IASF - Indian Air and Space Force) என பெயரிடப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் மாற்றம் இதுவரை  ‘தீரமிகு விமானப்படை’ என்றிருந்தது, வரும் காலத்தில்  ‘மதிப்புமிக்க விண்வெளிப்படை’யாக மாறுவதன் ஓர் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. உலகில் மட்டுமின்றி புவி ஈர்ப்பு விசைக்கு அப்பாலும் தனது பாதுகாப்பு சேவையை விரிவாக்குவதற்கான இந்திய விமானப்படையின் தொலைநோக்குப் பார்வை - 2047 என்ற மாற்றத்திற்கான திட்ட வரைவு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

நந்தனார்  கதையில் கற்பனை ஏறிய கதை!

நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத பிராம்மணர் பண்ணையாரிடம் படாதபாடுபட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.

ஒரு சரித்திரத் தவறு!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ‘பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை’ நூலை தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் திரு. பிஆர்.மகாதேவன். அவரது சீரிய சிந்தனை மிளிரும் சிறிய கட்டுரை இது....

இரு சங்கி கவிதைகள்

‘சங்கி’ யார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமான பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அது ஏதோ கெட்ட வார்த்தை போல தமிழகத்தில் சிலர் ஏளனமாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும், இரு சங்கிகளின் கவிதைகள் இவை….