துரியனின் ஆசை வார்த்தையை ஏற்று, தம்பியரில் இளையவனான சகாதேவனைப் பணயம் வைத்து ஆடிய தருமன் மீண்டும் தோற்கிறான். “தீய சகுனி கெலித்திட்டான்”.
Author: vamumurali
பாணபத்திரரும் சியாமா சாஸ்திரியும்
திருவிளையாடல் புராணத்தில் ஏமநாதன் என்ற வடநாட்டு பாடகன் மதுரை வந்து, 'எனக்கிணையாக பாடக் கூடியவர் பாண்டிய நாட்டில் உண்டா? ' என சவால் விட்ட கதை உண்டு. அதே போன்றதொரு சம்பவம் சியாமா சாஸ்திரிகள் வரலாற்றிலும் உண்டு.
மார்கழிப் பனித்துளி (1-3)
‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் ‘மார்கழிப் பனித்துளி’ கவிதைகளை அவ்வப்போது எழுதி வருகிறார். அற்புதமான சந்தம், இனிய தாள லயத்துடன், அரும் பொருளுடன் அமைந்த இசைக்கவிதைகள் இவை. அவரது அனுமதியுடன் இக்கவிதைகள் இங்கே இடம் பெறுகின்றன...
சுவாமிஜி நமது தேசியத்தின் தன்மானம்
முன்னாள் ஜனாதிபதி திரு. பிரணாப் முகர்ஜி, ஆங்கில வார இதழான ‘THE WEEK’ பத்திரிகையில் 2014-இல் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது....
பாஞ்சாலி சபதம் – 2.1.6
சூதாட்டத்தில் நாட்டை வைத்திழந்த தருமனிடம் அவனது சகோதரரை வைத்து ஆடினால், அதில் வென்றால் நாட்டை மீட்கலாம் என ஆசை வார்த்தை கூறுகிறான் துரியன். அது கண்டு அவையினர் மருகுகின்றனர். ஆனால், யாருக்கும் துரியனை எதிர்த்துப் பேசும் துணிவில்லை. பீமனும், விஜயனும் நகுலனும் வேதனையில் வாட, அவர்களின் பின்னவனான சகாதேவன் ஊமை போலிருந்தான்; ஏனெனில் அவன் பின்னாளில் நடக்கப் போவதை முன் உணர்ந்தவன் (ஜோதிட வல்லுநன்) என்கிறார் மகாகவி பாரதி. “சிங்க மைந்தை நாய்கள் - கொல்லுஞ் செய்தி காண” சகிக்காமல் அவையோர் தவிக்கின்றனர்..
அக்ரஹாரத்துப் பூனை
இந்தத் தடவை ஒரு மாற்றத்துக்கு அந்த அக்ரஹாரத்து மனுஷாளை விட்டுட்டு எனக்குத் தெரிஞ்ச ஒரு பூனையைப் பற்றி எழுதப் போறேன். பூனைகளுக்கு நிச்சயமாய் அலுப்போ சலிப்போ பயமோ சங்கடமோ வராது. பூனைகள் கதை படிக்கிறதோ, கதை திருடறதோ இல்லே. பூனைகளைப் பார்த்தா நம் கண்ணுக்குத் தான் ‘ஆஷாடபூதி’ மாதிரி இருக்குமே தவிர பாவம், அதுகளுக்கு அந்த மாதிரி குணமெல்லாம் நிச்சயம் கிடையாது.
இவர் தான் வீரத்துறவி விவேகானந்தர்
திரு.ப.ஜீவானந்தம் (1907- 1963), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர்; தமிழகத்தில் பொதுவுடைமை சித்தாந்தம் பரவக் காரணமான பெரியோர்; ஜனசக்தி பத்திரிகையின் நிறுவனர்; சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம் – 2.1.5
அவையில் சூதாட்டத்தை விதுரனைத் தவிர எதிர்ப்பார் யாருமில்லாத சூழலில், மீண்டும் தொடர்கிறது, வம்சம் அழிக்க வந்த சூது. பாண்டவர் தலைவனான தருமன் அங்கு நாட்டை பணையம் வைத்து இழக்கிறான். மன்னனே ஆயினும் நாட்டை ஆள மட்டுமே உரிமை உடையவன்; அவன் நாட்டை தனது சொந்தச் சொத்தாகக் கருதக் கூடாது என்று பொருள்பட, கோயில் பூசாரி கடவுள் சிலை விற்பதுபோல, வாயில் காப்போன் காக்க வேண்டிய வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், தேசத்தை சூதில் பணையம் வைத்து இழக்கிறான் தருமன் என்று கூறிக் கண்டிக்கிறார் மகாகவி பாரதி. “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” என்றும் குமுறுகிறார். மகாகவியின் தேசபக்தி கனலென வெளிப்படும் கவிதைத் தருணம் இது ...
மகாவித்துவான் சரித்திரம் – 2(9)
புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய் சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.
மகரிஷி விவேகானந்தர்
ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…
பாஞ்சாலி சபதம் – 2.1.4
அறவுரை கூறி குருகுல இளவரசனைத் திருத்த முயன்ற விதுரன் தன் மீது பொழியப்பட்ட துரியனின் சுடுசொற்களால் மனம் நொந்த விதுரன், “சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?” என்று விரக்தியுடன் அவையில் அமைதியாவதாக எழுதுகிறார் மகாகவி பாரதி. மன்னர் திருதராஷ்டிரனும், பீஷ்மரும் இதனைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கையில் நான் நீதி சொல்லி என்ன பயன் என்றும் விதுரன் வருந்துகிறார்...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(16)
இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி விரிவான பல செய்திகளைக் கொடுக்க வேண்டும். ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல, நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், அதற்குரிய ஒரே வழி போர்! ஆம், போர் மட்டுமே” என்று முழங்கியவர் நேதாஜி.
இந்தியாவை தலைமிர்ந்து நிற்கச் செய்தவர்
பாரதத்தின் முதல் பிரதமரான திரு. ஜவஹர்லால் நேரு (1889- 1964), சுவாமி விவேகானந்தர் குறித்துக் கூறியவை…
பாஞ்சாலி சபதம்- 2.1.3
முதல் பாக முடிவில், சூதில் பணையமாக நாட்டை வைத்து ஆடுமாறு சகுனி கூறியதைக் கண்டித்து அவையில் விதுரன் ஒருவரே பேசினார். இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில், விதுரனுக்கு துரியன் ஆவேச மொழியில் பதில் அளிக்கிறான். “ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்” வைத்து, தின்ற உப்பினுக்கே நாசம் தேடும் நனி கெட்ட விதுரன் என்று தனது சிறிய தந்தையும் அமைச்சருமான விதுரனை ஏசுகிறான் துரியன். இப்போதேனும் தருமன் சூதை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதி வலியதாயிற்றே?
மாலைப் பொழுதின் மயக்கத்திலே…
குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்... இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?