கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு மாபெரும் மாயை, ‘ஆரிய- திராவிட இனவாதம்’. இந்த மாபெரும் பொய் தொடங்கிய காலத்திலேயே இதன் அபாயத்தை உணர்ந்து எச்சரித்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். இது தொடர்பாக பாரதி ஆய்வாளர் அமரர் திரு. பெ.சு.மணி அவர்களின் கட்டுரை இங்கே....
Month: November 2022
பாஞ்சாலி சபதம்- 1.1.11
‘சொந்த மகனை இகழ்ந்து பிறரது மகன்களைப் போற்றும் தந்தையர் உன்னைப் போல உலகில் யாருமில்லை” எறு தன தந்தையைத் தூற்றும் துரியன், சூதுக்கழைத்து பாண்டவரை வெல்ல விரும்புவதை வெளிப்படுத்துகிறான். மகாகவி இப்பாடலில் காட்டும் தர்க்க நயங்கள் கவனிக்கத் தக்கவை...
இசைவல்லுநர் விவேகானந்தர்
மறைந்த திரு. பெ.சு.மணி, தமிழின் மூத்த ஆய்வாளர்; பாரதியியல் எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம்- 1.1.10
திருதராஷ்டிரன் கூறிய அறிவுரைகளைக் கேட்டு வெகுண்ட அவரது புதல்வன், நல்லுரை கேளாச் செவியனாக, தனது சினம் கொண்ட வார்த்தைகளைக் கூறத் தொடங்குவதாக இப்பாடலை முடிக்கிறார் மகாகவி பாரதி.
இந்தியர்களுக்கு உயிர் இருக்கிறதா?
மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன், புகழ்பெற்ற பேச்சாளரும் எழுத்தாளரும் ஆவார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கியவர். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இஅவரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம்- 1.1.9
சகுனியின் தீய சொற்களைக் கேட்டு வெகுண்ட திருதராஷ்டிரன், அவனை கடுமொழி கூறி எச்சரிக்கிறார். தனது பிள்ளையை நாசம் செய்ய வந்த பேயென சகுனியை இகழ்கிறார் மன்னர். அவர் இயல்பில் நடுநிலை தவறாதவர் என்பதை இப்பாடல்களில் காட்டுகிறார் மகாகவி பாரதி.
ஞான ஜெயந்தி
அமரர் திரு. ரா.கணபதி, ஆன்மிக எழுத்தாளர்; காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்; மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபதேசங்களை 7 பாகங்களாக, அற்புதக் கருவூலமாக ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலாகத் தொகுத்தவர்; ‘அறிவுக் கனலே அருட்புனலே’ (ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு), ’சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு’, ’காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பல ஆன்மிக நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்து இவர் எழுதிய இக்கட்டுரை, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு (1963) விழாவை முன்னிட்டு, கல்கி வார இதழில் (மலர்- 22, இதழ்- 25) இடம்பெற்றதாகும்.
பாஞ்சாலி சபதம்- 1.1.8
அழுக்காறால் புகைந்த மருகனுடன் நாட்டின் மன்னனும் அவனது தந்தையுமான திருதராஷ்டிரனிடம் செல்லும் சகுனி, தனது மைத்துனரின் மனதில் விஷம் விதைக்க முயல்கிறான். ஆனால், திருதராஷ்டிரன் தனது மகனைப் பார்த்து, “பாண்டவர் போன்ற அரும் சகோதாரர்கள் உடன் இருக்கையில் உனக்கு வேதனை ஏன்?” என்று கேட்டு எரியும் கொள்ளியில் நெய் வார்க்கிறார். அப்போது நாடு மன்னரின் கடமைகள் என்ன என்று சகுனி உரைப்பதாக இப்பாடல்களைப் புனைத்திருக்கிறார் மகாகவி பாரதி...
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 11
இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.
மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே!
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி...
பாஞ்சாலி சபதம்- 1.1.7
இளையவர் வழிதவறுகையில் அவர்களை அறிவுறுத்தி வழிநடத்துவதே பெரியோரின் இயல்பு. மாறாக, பொறாமைத் தீயில் வேகும் மருகன் துரியோதனனை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும் வகையில் சூதாட்ட உபாயம் கூறுகிறான் தாய்மாமன் சகுனி. அதனை ‘நல்ல இங்கிதம்’ என்று கூறி கட்டித் தழுவுகிறான் துரியோதனன். தீயோர் சொல் முதலில் இனிக்கும்; பின்னர் கசக்கும் என்பது தானே உலக வழக்கம்?
சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10
இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் ராமானுஜர்.
ஸ்வதந்திர கர்ஜனை- 2(8)
1923-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாகபுரியில் ‘கொடிப் போராட்டம்’ எனும் ஒரு போராட்டம் தொடங்கியது. அது என்ன கொடிப் போராட்டம்? நாகபுரி நகரத்தில் கண்டோன்மெண்ட் என வழங்கப்படும் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்குள் இந்திய தேசபக்தர்கள் தங்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் போவதா? கூடாது என்று அதற்கு வெள்ளைக்காரர்கள் தடை விதித்தனர். நாகபுரியில் தொடங்கிய அந்த சிறு தீப்பொறி நாடு முழுதும் பரவி எங்கெங்கும் கொடிப் போராட்டம் நடக்கலாயிற்று.
பாஞ்சாலி சபதம்- 1.1.6
இந்திரப்பிரஸ்தத்தில் (இன்றைய தில்லி) தனது தாயாதி சகோதரனான யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகம் அவனுக்கு சக்கரவர்த்தி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அது அஸ்தினாபுரத்தை ஆண்ட துரியோதனனுக்கு அழுக்காறாமையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவன் தனது நிழலாகக் கருதும் தனது தாய்மாமனிடம் பொறாமையுடன் உரைத்தவையே இங்கு மகாகவி பாரதியால் அழகிய கவிதைகளாக வடிவெடுத்திருக்கின்றன...
சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 9
ராமானுஜர் தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி, பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயல்களை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.