ஆனந்தமாய் விளக்கேற்று! (கவிதை)

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

புதுமைக் கவிஞர் திரு. ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதிய மரபுக் கவிதை இது. மரபிலிருந்து கிளைப்பது தானே புதுமை?

ஆதியிலிருந்த இருளை நினைந்து

ஆனந்தமாய் விளக்கேற்று.

கோதை நாயகன் புகழைப் பாடி 

கோலமிட்டுக் கொண்டாடு! 

.

தவபூமி தழைத்தோங்க

விரதமிருந்து விளக்கேற்று.

நவபூமியானாலும் உலகின்

தலைபூமியெனக் கொண்டாடு!

சங்கு சக்கரக்  கரத்தோனை

சரண்புகுந்து விளக்கேற்று.

பொன்னுலகம் அருகிலென்று

சங்கம் முழங்கக் கொண்டாடு!

.

அறம் காத்த அவதாரங்கள் 

அனைத்திற்கும் விளக்கேற்று.

கலியுகக் கல்கி நீயென்றே

புவியதிரக் கொண்டாடு!

$$$

One thought on “ஆனந்தமாய் விளக்கேற்று! (கவிதை)

Leave a comment