ஸ்வதந்திர கர்ஜனை- 2(8)

1923-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாகபுரியில்  ‘கொடிப் போராட்டம்’  எனும் ஒரு போராட்டம் தொடங்கியது. அது என்ன கொடிப் போராட்டம்? நாகபுரி நகரத்தில் கண்டோன்மெண்ட் என வழங்கப்படும் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்குள் இந்திய தேசபக்தர்கள் தங்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் போவதா? கூடாது என்று அதற்கு வெள்ளைக்காரர்கள் தடை விதித்தனர். நாகபுரியில் தொடங்கிய அந்த சிறு தீப்பொறி நாடு முழுதும் பரவி எங்கெங்கும் கொடிப் போராட்டம் நடக்கலாயிற்று.

பாஞ்சாலி சபதம்- 1.1.6

இந்திரப்பிரஸ்தத்தில் (இன்றைய தில்லி) தனது தாயாதி சகோதரனான யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகம் அவனுக்கு சக்கரவர்த்தி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அது அஸ்தினாபுரத்தை ஆண்ட துரியோதனனுக்கு அழுக்காறாமையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவன் தனது நிழலாகக் கருதும் தனது தாய்மாமனிடம் பொறாமையுடன் உரைத்தவையே இங்கு மகாகவி பாரதியால் அழகிய கவிதைகளாக வடிவெடுத்திருக்கின்றன...

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 9

ராமானுஜர் தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி, பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயல்களை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(6ஆ)

நல்ல திறமையுள்ள விகடகவியொருவர் அப்பொழுது பல வகைப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்களைப் பேசி யாவரையும் சிரிக்கும்படி செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்திருந்த வேதநாயகம் பிள்ளை இப்புலவர்கோமானை நோக்கி, "விகடகவிகள் வித்துவான்களுக்கு நேர் விரோதிகள்; வித்துவான்கள் இழிந்தவற்றையும் உயர்ந்தனவாகக் கூறுபவர்கள்; விகடகவிகள் உயர்ந்தவற்றை இழிந்தனவாக நினைக்கும்படி பேசுபவர்கள்" என்றார். புத்திமான்கள் பேசும் எந்தப் பேச்சும் நயமாக இருக்குமென்பதை அவருடைய வார்த்தை புலப்படுத்தியது.

பாஞ்சாலி சபதம் – 1.1.5

ராஜசூய யாகம் நடத்தி தன்னை நாட்டின் சக்கரவர்த்தியாக அறிவித்துக் கொண்ட யுதிஷ்டிரனுக்கு பாரதம் முழுவதும் ஆண்ட முடியுடை வேந்தர்கள் செய்த மரியாதை, அவனது தாயாதியான துரியோதனனுக்குப் பொறுக்கவில்லை. அஸ்தினாபுரத்திலிருந்து துரத்தினாலும், தனிநகரை அமைத்து ஆளும் பாண்டவர்களின் திறனைக் கண்டு வயிறெரிகிறான் துரியன். அவனது புலம்பலை கவிதையாக்கி, ‘பாஞ்சாலி சபதம்’ காப்பியத்துக்கு வித்திடுகிறார் மகாகவி பாரதி.

சத்திய சோதனை- 5(11-15)

காங்கிரஸின் பெயரால் எதையும் செய்ய வேண்டாம் என்று என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். நாங்கள் விரும்பியதெல்லாம், வேலையையேயன்றிப் பெயரையல்ல; பொருளையேயல்லாமல் நிழலையல்ல. ஏனெனில், அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கத்தை இஷ்டம்போல் ஆட்டி வந்தவர்களான தோட்ட முதலாளிகளுக்கும், காங்கிரஸ் என்ற பெயரே வேப்பங்காயாக, வெறுப்பாக இருந்தது. ...

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 8

சைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கி வாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் இதற்குள் தலையைக் கொடுக்காமல் போனால் விபரீதம் எதுவும் நிகழாது. மாறாக மன்னனுக்கு மதமேறிவிட்டால் அவ்வளவுதான், மாற்று சமயத்தினரின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

காந்தாமணி

காதலின் புகழ் குறித்து தனிக் கவிதைகளே (பாரதி அறுபத்தாறு- 49-53) எழுதியவர் மகாகவி பாரதி. காதல் என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருள் என்பதே அவரது பார்வை. வயது, மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் காதலுக்கு ஒருபொருட்டாக மாட்டாது என்பதை இக்கதையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதி, தனக்கே உரித்தான குறும்பான மொழிநடையில்…

எனது முற்றத்தில் – 29

தேசத்தின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் மொழிகளிடையே சுமுக உறவு ஏற்படுத்தி,கழகங்கள் உருவாக்கி வைத்திருக்கிற மொழித்  துவேஷத்தை துடைத்து அழிப்பதற்கு முயற்சி தொடங்கிவிட்டது. விளையாட்டு, பாட்டு, பழமொழி, கதை, உரையாடல் என்று நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியிலிருந்து உதயமாகி வியாபிப்பது நல்ல அறிகுறி.

பாஞ்சாலி சபதம் -1.1.4

காப்பிய இலக்கணப்படி, ஹஸ்தினாபுர மன்னனை மகாகவி பாரதி அறிமுகம் செய்கிறார் இந்தப் பகுதியில்... துரியோதனன் இக்காப்பியத்தின் எதிர்நாயகன் ஆயினும் அவனது வல்லமையை எடுத்தியம்புகிறார் கவி.

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 7

காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்றடைகிறது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று அங்கு திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்துவிட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(7)

அந்த மாநாடு தொடங்கும் வரை காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த சி.ஆர்.தாசும், லாலா லஜபதி ராயும்,  மாநாடு தொடங்கியதும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து முன்மொழியவும், வழிமொழியவும் ஒப்புக் கொண்டார்கள். இந்த மாநாட்டில் காந்திஜிக்கு பலத்த ஆதரவு காணப்பட்டது.

பாஞ்சாலி சபதம் – 1.1.3

குருவம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் சிறப்பை வர்ணிக்கும் பாடல்களுடன் பாஞ்சாலி சபதத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி. காப்பிய இலக்கணத்தின்படி, ஊர்ச் சிறப்புடன் தொடங்குதல் மரபு.

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 6

பிறகு ஒருநாள் திருகோஷ்டியூரில் குடிகொண்டிருந்த எம்பெருமான் ஆலயச் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு “எம்பெருமானின் பரம பக்தர்களே ! அனைவரும் இங்கே வாருங்கள். இந்த அற்ப மானுடப் பிறவி முடிந்த பின்னர் நீங்கள் வைகுந்தம் செல்ல நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்” என்று அழைத்தார்....

மகாவித்துவான் சரித்திரம்- 2 (6அ)

கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி அன்று போல நான் நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்பிரவாகம் பெருகிக்கொண்டிருப்ப அதனைக் காதினாற்கேட்டும் கையினாலெழுதியும் மனத்தினாலறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது....