எழுத்துத்தான் பாரதி நமக்காக விட்டுச் சென்றிருக்கும் தவம். வெளியே இருந்து வியக்கும்போது அது நிழல்தரும் மரமாக இருக்கிறது. உள்ளே நுழைந்தாலோ அது நெருப்புக் குழம்பாகத் தகதகக்கிறது. இதுவே பாரதத்தின் அடிநாதம். இதுவே பாரதியின் இயல்பு.
Day: March 29, 2023
பகவத்கீதை மொழிபெயர்ப்பு (முன்னுரை- 3)
ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய் என்று கடவுள் சொல்லுகிறார்.
அகமும் புறமும்- 3ஆ
தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின்தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.