ஒரு தேசம் அல்லது ஒரு இனம் அதன் உண்மையான வரலாற்றை, முழுமையான மகத்துவத்தை, பெருமிதத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுமானால் அது உள்ளுக்குள் வலிமை பெறும்; யாராலும் வெல்ல முடியாதபடி ஆற்றலுடன் வல்லமை பெற்றுத் திகழும். எனவே வரலாற்றுக்கும் தேசம் அல்லது இனத்தின் விழிப்புணர்வுக்கும் பெருமிதத்திற்கும், நெருங்கிய, பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது.....
Day: March 18, 2023
நாடும் சமுதாயமும் தான் உயர்ந்தது என உணர்த்தியவர்
திரு.ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் செயல்படும் மக்கள் சிந்தனைப் பேரவை அமைப்பின் நிறுவனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகிகளுள் ஒருவர். கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கான இளைஞர் மாநாட்டில் 12.1.2013-இல் ஸ்டாலின் குணசேகரன் பேசியதன் சுருக்கம் இது.