மகாகவி பாரதி வாழ்ந்த காலத்தில் அரசியல் அரங்கிலும் ஆன்மிக அரங்கிலும் நவீன இந்தியாவிற்கான எழுச்சியை பகவத்கீதையிலிருந்தே பலரும் பெற்றார்கள். குறிப்பாக, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகரிஷி அரவிந்தர் ஆகியோருக்கும் கீதையே ஆற்றல் மிக்க வழிகாட்டியாக இருந்தது. இவர்கள் அனைவரும் கீதைக்கு உரை எழுதினர். மகாகவி பாரதியும் இதில் விதிவிலக்கல்ல. மகாகவி பாரதி 1912-ஆம் ஆண்டில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். 1924 -25 காலகட்டத்தில் பகவத் கீதை முன்னுரை, பகவத்கீதை மூலமும் உரையும் ஆகிய நூல்களை பாரதி பிரசுராலயத்தார் முதன்முதலில் பதிப்பித்தனர். தனது முன்னுரையைத் தொடர்ந்து, பகவத் கீதை சுலோகங்கள் அனைத்தையும் நேரடி மொழிபெயர்ப்பில் 18 அத்தியாயங்களாக மகாகவி பாரதி வழங்கி இருக்கிறார். அவை அனைத்தும் இங்கே...
Day: March 27, 2023
நாட்டுப்பற்றும் பாடத்திட்டமும்
1947-க்குப் பிறகு கல்விச் சாலைகளின் பாடத்திட்டங்களில் பாரதத்தின் முன்னைய நாளின் வீர, தீர மன்னர்கள், தாய் மண்ணைக் காக்கப் போராடிய வீர புருஷர்கள், வந்தேறிய பகையாளர்களை உயிர் உள்ள வரை எதிர்த்து நின்ற வணங்கா முடியரசர்களை விஞ்ஞான, மெய்ஞான நுட்பங்களைக் கற்றறிந்த முன்னோர்களை அடையாளம் காட்டி இளைஞர்களை உருவாக்கத் தவறிவிட்டோம்....