வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் ஐம்பெரும் கட்டுரைகளை (பஞ்ச வியாசங்கள்), மகாகவி பாரதி தமிழில் வழங்கி இருக்கிறார். அவற்றுள் ஒன்று இது. வங்க பாஷையில் தாகூரால் எழுதப்பெற்று, அவரது சகோதரர் சுரேந்திரநாத் தாகூரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘மாடர்ன் ரிவியூ’ பத்திரிகையில் வெளியான கட்டுரை (Modern Review – 1917 September - Thau Shalt Obey), பின்னர் மகாகவி பாரதியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தாகூரின் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், சுய பகடிகள் நிறைந்த, கவித்துவம் மிகுந்த நடையை, இயன்ற வரை அக்காலத் தமிழில் வழங்கி இருக்கிறார் பாரதி.
Day: March 12, 2023
பெரியாரைப் போற்றுதும்!
பாரதியாருக்கு தேசிய உணர்வை ஊட்டி, அவரது பணிக்கு உரமும் சேர்த்தவர் ஜி.சுப்பிரமணிய ஐயர் எனில் சற்றும் மிகையல்ல. ஐயரவர்களின் சிந்தனை சமூகத்தின் அவலங்கள். தீண்டாமைக் கொடுமைகள் குறித்து எப்படி இருந்தன என்பதை 1920-ஆம் ஆண்டு சுதேசமித்திரன் ஆண்டு மலரில் சுவாமி விவேகானந்தர் சொல்லிய சொற்களை வார்த்தை பிசகாது தனது பத்திரிகையில் பதிவு செய்தது மூலம் நன்கறியலாம்.
இந்தியாவை எழுச்சி பெறச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. மதுரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர்; ‘ராமகிருஷ்ண விஜயம்’ மாத இதழின் முன்னாள் ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது இரண்டாவது கட்டுரை இது...